Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 22-07-2022

இன்றைய தியானம்(Tamil) 22-07-2022

 

இசைக்கருவி பேசுகிறது 

 

“தம்புரோடும், நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.” - சங்கீதம்150:4

 

எனது எஜமான் மிகப் பெரிய செல்வந்தர். ஏதோ காரணத்தினால் அவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டபடியினால் அவரது வீட்டுப் பொருள்கள் எல்லாம் ஏலம் விடப்பட்டது. வந்திருந்தவர்கள் எல்லாரும் அனைத்து ஜாமான்களையும் ஏலம் எடுத்துவிட்டனர். இசைக்கருவியாகிய நான் மாத்திரம் தூசிபடிந்து ஏலத்தில் எடுக்கப்படாமல் ஒரு ஓரத்தில் இருந்தேன். கடைசியில் உட்கார்ந்திருந்த வயதான என் எஜமானர் வந்தார். என் தூசியைத் துடைத்து சில கம்பிகளைச் சரிசெய்து என்னைக் கையிலெடுத்து ஒரு அழகான பாடலை மீட்டினார். சங்கீதத்தில் மயங்காதவர் யாராவது உண்டா? பின்னர் நான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டேன். நான் ஏலம் எடுக்கப்பட்ட போது என் எஜமான் முகத்தில் அதுவரை இல்லாத ஒரு மகிழ்ச்சியைப் பார்த்தேன். 

 

வேதத்திலேயும் இசைக்கருவியான என்னைப் பல பரிசுத்தவான்கள் பயன்படுத்தியுள்ளனர். தேவன் செங்கடலை இரண்டாகப் பிளந்து இஸ்ரவேலரை வழிநடத்தின அதிசயம் நடந்த போது மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவள் தம்புரு என்னும் இசைக்கருவியை தன் கையில் எடுத்துக்கொண்டு கர்த்தரின் வெற்றியைக் கொண்டாடினாள். கர்த்தர் மோசேயிடம் “ யுத்தத்துக்குப் போகும் போது பூரிகை என்னும் இசைக்கருவியை பெருந்தொனியாய் முழங்கும் போது கர்த்தரின் சமுகத்தில் நினைவுகூரப்பட்டு பகைவருக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள்” என்று சொன்னார். சத்துருவின் கையினின்று விடுதலை கிடைக்க இசைக்கருவியாகிய நான் பயன்படுத்தப்பட்டேன், யோசுவாவின் காலத்தில் ஆசாரியர்கள் எக்காளம் என்னும் இசைக்கருவியை ஊதுகையில் எரிகோவின் அலங்கம் இடிந்து விழுந்தது. அது மிகவும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

 

தாவீது சுரமண்டலம் என்னும் இசைக்கருவியாகிய என்னை வாசித்த போது சவுலின் மேலிருந்த பொல்லாத ஆவி விலகிற்று. மேலும் தாவீது என்னைக் கொண்டு அதிகமான சங்கீதங்கள் பாடியுள்ளார் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையிலும் அவர் ஆரவாரத்தோடு இசைக்கருவியாகிய எக்காளம் தொனிக்கையில் வானத்திலிருந்து இறங்கி வருவார் என்கிற செய்தியை அறிந்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன். கர்த்தருக்குப் பிரியமானவர்களே! இசைக்கருவியாகிய என்னைப் போல நீங்களும் உங்களை ஆண்டவருடைய திருக்கரத்தில் இசைக்கருவியாக இன்று ஒப்புக்கொடுப்பீர்களா? 

 

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே எல்லாக் காரியங்களிலும் நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவனை மிரியாமைப் போல கொண்டாடுவீர்களா? சத்துருவின் கோட்டையைத் தகர்க்க பயன்படுவீர்களா? இந்த உலகில் பிசாசானவனால் கட்டப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்க, சிறுமைப்பட்டவர்களுக்கு சுவிசேஷம் சொல்ல, அபிஷேகம் பெற்ற உங்களால் விடுதலை முழக்கம் ஒலிக்குமா? கடைசி எக்காளம் தொனிக்கும் போது நாம் ஒரு இமைப்பொழுதிலே மறுரூபமாகி அவரோடே கூட இருப்போம்! அல்லேலூயா!

- A. பியூலா 

 

ஜெபக்குறிப்பு:  

Youtube மற்றும் Facebook மூலமாக 8 மொழிகளில் வெளியிடப்படும் நமது மோட்சப் பயணம் தின தியான செய்தி தங்கு தடையின்றி வெளிவர ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)