Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 23.04.2024

இன்றைய தியானம்(Tamil) 23.04.2024

 

யூதாஸா? பேதுருவா?

 

"பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து…" - அப்.1:8

 

ஒரு பேனாவை நம் கையில் வைத்து எழுதும் போது அது தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுக்காமல் இருந்தால் என்னவாகும்? நான் ஒரு பேனா எனக்கு எல்லாம் தெரியும், எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என்று கூறினால், நமக்கு கண்டிப்பாக சிரிப்பு வரும். அதேபோல நாமும் என்னால் எல்லாம் முடியும். சிறப்பாக பிரசங்கிப்பேன், பாடுவேன் என கூறுவோமானால் அது தேவனுக்கு சிரிப்பைத்தான் உண்டாக்கும். பரிசுத்த ஆவியானவரின் துணையின்றி நாம் செய்யும் அனைத்தும் எந்த பிரயோஜனத்தையும் நல்ல விளைவையும் ஏற்படுத்தாது. அதை இருவரின் வாழ்வில் காண்போம்.

 

இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் அவருடன் இருந்த இரண்டு சீடர்கள் தான் அவர்கள். ஒருவர் பேதுரு, மற்றவர் யூதாஸ்காரியோத்து. இருவருமே இயேசு சிலுவைக்கு செல்லும் போது அவரை மனதளவில் காயப்படுத்தியவர்கள். யூதாஸ் முப்பது வெள்ளிக்காசிற்காக காட்டிக் கொடுத்தார். பேதுரு இயேசு சித்திரவதை செய்யப்படும் போது மூன்று முறை மறுதலிக்கிறார். எவ்வாறு தெரியுமா? இயேசுவை அறியேன் என்று சொல்லி அவரை சபித்து சத்தியம் பண்ணினார்.

 

இவ்விரு சீடர்களில் யார் செய்தது பெரிய தவறாக தெரிகிறது? பேதுரு யூதாஸைப் போல தன் வாழ்க்கையின் முடிவை தானே எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக மனங்கசந்து அழுது ஒப்புக் கொடுத்தார். (லூக்கா 22:62) எந்த ஜனத்தாரின் முன்பு இயேசுவை மறுதலித்தாரோ அதே ஜனத்தின் மத்தியில் இயேசுவை பிரசித்தப்படுத்தி சாட்சியாக நின்றார் பேதுரு. இவையனைத்தையும் தன் சொந்த பெலத்தினாலா செய்தார்? அல்லவே, இனி தன் சொந்த பெலத்தால் வைராக்கியத்தால் ஒன்றும் முடியாது என்பதை உணர்ந்து பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்கு தன்னை முழுவதுமாக சரணடைந்து தேவ பெலத்தோடு தேவனுக்கு சாட்சியாக நின்றார்.

 

என் அன்பு சகோதர, சகோதரிகளே! நம் கைகளில் எப்படி ஒரு பேனா முழுவதுமாக தன்னை ஒப்புக் கொடுத்து நமக்கும் மற்றவருக்கும் பயனுள்ளதாக இருக்கின்றதோ அதே போல் நாம் நம் வாழ்க்கையை தேவனுக்கு பரிசுத்த ஆவியானவரின் துணையோடு ஒப்புக் கொடுத்து பெலனடைந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தை பறைசாற்றி அவருக்கு சாட்சியாக வாழுவோம்.

- Mrs. ஜெசில்டா அலெக்ஸ்

 

ஜெபக்குறிப்பு: 

24 மணி நேர சங்கிலி தொடர் ஜெபம் நமது அனைத்து பணித்தளங்களிலும் நடைபெற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)