Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 24.06.2024

இன்றைய தியானம்(Tamil) 24.06.2024

 

எல்லாம் கர்த்தருடையது

 

"…பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே" - சங்கீதம் 50:12 

 

கர்த்தருடைய வேதத்திலே இரவும் பகலும் பிரியமாயிருந்து, தவறாது வேதம் வாசித்து இரவு தூங்கச் செல்லுவேன். ஒரு நாள் ஒரு கனவு: அதில் தங்கம், வெள்ளி, பவளம், முத்து, வைரம், வைடூரியம், நவரத்தினகற்கள் இன்னும் பல விலையேறப்பெற்ற பொருட்கள் குவியல் குவியலாக இருந்தது. மறுபக்கம் மிக சாதாரணமாக ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவருக்கும் அந்தப் பொருட்களுக்கும் மத்தியில் மனிதக்கூட்டம் நிறைந்திருந்தது. நானும் ஒருவனாக அக்கூட்டத்தில் இருந்தேன்! அவர் மனிதக் கூட்டத்தைப் பார்த்து "பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே!" அந்தப் பக்கம் விலையேறப் பெற்ற பொருட்கள் இந்தப் பக்கம் நான் இந்த இரண்டில் எதை விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்து சொந்தமாக்கிக் கொள்ளுங்கள் என்றார். மனிதக் கூட்டம் பொருட்களை நோக்கி ஓடியது. சில நொடிகளில் கூச்சல், சண்டை, சச்சரவு, குழப்பம் அமளி, ஆரவார பேரொளி உண்டானது. நான் அமைதியாக நின்று கொண்டு இருந்தேன்! அவர் என்னைப் பார்த்து ஏன்? நின்று கொண்டிருக்கிறாய் நீயும் உனக்கு விருப்பமானதை போய் எடுத்துக் கொள் என்றார். என் உள்ளமோ "பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே" என்று சொன்ன அவரையே சொந்தமாக்க வேண்டுமென்று எண்ணியது. கனவு தெளிந்து எழுந்தேன்.

 

இயேசுவானவர் வாழ்ந்த நாட்களில் அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். அவருக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள். அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்தாள். "தேவையானது ஒன்றே மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள்" என்று ஆண்டவரால் மரியாள் பாராட்டப்பட்டாள்.

   

அன்பானவர்களே, பூமியும் அதிலுள்ள யாவும் கர்த்தருடையது. அவருக்குள் சகலமும் படைக்கப்பட்டு இருக்கிறது. எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. பொருளாசை கொண்டவர்கள் மெய்ப்பொருளான இயேசுவை அறியமாட்டார்கள். உலக ஆசை இயேசுவிடமிருந்து கிடைக்கும் ஆசீர்வாதத்தை இழக்கச் செய்கிறது. இயேசுவைப்பற்றி அறிகிற அறிவே நாம் சொந்தமாக்கிக் கொள்ளும் விலையேறப்பெற்ற செல்வம். எனவே அவருடைய பாதத்தில் அமர்ந்து இயேசுவினிடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். அழியாத மாசற்ற நித்தியஜீவன் நமக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தவர்களாக நாம் செயல்படுவோம்.

- K. S.மாணிக்கவாசகம்

 

ஜெபக்குறிப்பு: 

நம்மோடு இணைந்துள்ள தோழமை மிஷனெரிகளை ஆண்டவர் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)