Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 18.06.2024

இன்றைய தியானம்(Tamil) 18.06.2024

 

தேவ அன்பு

 

"கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?..." - ரோமர் 8:36

 

தேவனுக்காய் எதை இழந்தாலும் தேவனுடைய அன்பை இழக்க மாட்டேன் என்றவர் தான் டேவிட் லிவிங்ஸ்டன். அவருடைய இருதயம் முழுவதும் ஆப்பிரிக்க ஜனங்கள் இயேசுவின் அன்பை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு பாரம் இருந்தது. அதோடு ஆப்பிரிக்காவில் ஊழியத்தைத் தொடங்கினார். அங்கு பல இன்னல்களையும், இழப்புகளையும் சந்தித்தார். உடனே அவரை அனுப்பின மிஷனெரி சங்கம் சொன்னது, " லிவிங்ஸ்டன் இங்கே வந்து விடுங்கள். அங்கேயிருந்து நீங்கள் ஊழியத்தை நிறைவேற்றினது போதும்" என்று. ஆனால் அவர் ஊழியத்தை விட்டுப் பின் வாங்கவில்லை. அவர் ஊழியத்திற்கு போகும் போது சிங்கம் ஒன்று அவருடைய கையைக் கடித்து விட்டது. ஆனாலும் தொடர்ந்து ஊழியம் செய்தார். பலவித விஷக்காய்ச்சல்கள் லிவிங்ஸ்டனை தாக்கியது. சரியான சத்துள்ள ஆகாரமின்றி சரீரம் மிகவும் பெலவீனப்பட்டது. உடனே மிஷனெரி சங்கம் சொன்னது, மனைவியையும், பிள்ளைகளையும் இழந்தாய், சரீர பெலத்தையும் இழந்தாய், இனிமேலும் நீ அங்கே இருக்க வேண்டாம் போதும் வந்து விடு என்றது. ஆனால் லிவிங்ஸ்டன் தன் ஜீவன் போகும் மட்டும் ஆப்பிரிக்க ஜனங்களுக்கு தேவ அன்பை அறிவிப்பேன் என்று உறுதியாக மறுத்துவிட்டார். எதுவும் தேவனுடைய அன்பை விட்டு அவரைப் பிரிக்கவில்லை.

 

பரி.வேதாகமத்தில் அப்.பவுலைக் குறித்து நாம் அறிவோம். இயேசுவின் மேலுள்ள அன்பிற்காக அதிகமாக அடிபட்டவர், அதிகமாக காவல்களில் வைக்கப்பட்டவர், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவர் . மேலும் யூதர்களால் அடிபட்டவர், கல்லெறியுண்டவர், கப்பற் சேதத்தில் இருந்தவர். வருத்தத்திலும் கண்விழிப்புகளிலும், பசியிலும், தாகத்திலும் இருந்தவர். இப்படி கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருந்த பவுலை சந்தித்த இயேசுவின் அன்பு அவரை இயேசுவைப் பின்பற்றுகிறவராக, நல்ல ஊழியக்காரனாக மாற்றியது.

 

அன்பானவர்களே, இந்த உலகத்தில் பாவத்தில் சத்துருவுக்கு அடிமையாயிருந்த நம்மை இயேசு அவருடைய இரத்தத்தைச் சிந்தி, நம்மை அவருடைய சொந்த பிள்ளையாக ஏற்றுக் கொண்டார். அநேக நேரத்தில் நாம் அந்த அன்பை விட்டுப் பின்வாங்கி விடுகிறோம். இயேசுவின் அன்பு ஒரு போதும் மாறாது. இன்றைக்கும் நம்மை இருக்கிற வண்ணமாகவே நேசிக்கிறார். அதனால் என்ன சூழ்நிலைகள் வந்தாலும் எதுவும் தேவனுடைய அன்பை விட்டு நம்மைப் பிரிக்காது என்று நிச்சயித்துக் கொண்டு அவருக்காய் செயல்படுவோம். அவருடைய அன்பை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுவோம். ஆமென்!

- Bro. கிறிஸ்டோபர்

 

ஜெபக்குறிப்பு: 

ஒரு இலட்சம் சிறுவர்கள் சிறுவர் முகாம்கள் மூலம் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)