Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 14-07-2022

இன்றைய தியானம்(Tamil) 14-07-2022

 

பொய் உதடு

 

“பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்;…” – நீதிமொழிகள் 12:22  

 

நான் என் வீட்டிலிருந்து கடைக்குச் செல்லும்போது அந்த வழியில் மிகவும் அருவருப்பாக கெட்ட நாற்றமடித்தது. ஆனால் அதைக் கடக்காமல் நான் கடைக்குச் சென்றுவிடமுடியாது. அந்த இடத்தை ஒருவழியாய் கடந்து போய் விட்டேன். திரும்பிவரும் போது மேற்கண்ட வசனம் எனக்கு நினைவிற்கு வந்தது. நாம் பொய் வார்த்தைகளைப் பேசும் போது நம்மையும் தேவன் அருவருப்பாய் தான் பார்க்கிறார்.

 

பொய் பேசுவது அவ்வளவு பெரிய பாவமாக நமக்குத் தெரிவதில்லை. பிறருடைய நம்பிக்கையை நாம் பெற வேண்டும், நான் செய்யும் காரியத்தை யாரும் குறைகூறி விடக்கூடாது என்பதற்காக சர்வசாதாரணமாக பொய்களைப் பேசுகிறோம். இதை தேவன் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் நாம் நினைப்பதில்லை. நாம் தேவனுக்குப் பயந்து வாழ வேண்டும், அவரைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற உணர்வு நமக்கிருந்தால் இப்படிப்பட்ட பொய் வார்த்தைகள் நம் வாயில் வராது. பொய் பேசினால் வரும் விளைவுகளைக் குறித்து வேதம் என்ன கூறுகிறது. இதோ...

 

• பொய்பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும் (சங்கீதம் 63:11)

 

• பொய்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் தப்புவதில்லை. (நீதி.19:5)

 

• பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான். (நீதி.19:9)

 

• பொய் நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம் போலிருக்கும். (நீதி.21:6)

 

• அவர்கள் சொல்லிய பொய்யினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக. (சங்கீதம் 59:12)

 

• பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை.(சங்கீதம்101:7)

 

• பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப் போவார்களாக. (சங்கீதம்119:78)

 

• பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான். (நீதி.12:17)

 

• பொய்நாவை கர்த்தர் வெறுக்கிறார். (நீதி.6:17)

 

• பொய்சாட்சிக்காரன் கெட்டுப்போவான். (நீதி.21:28)

 

ஆம்! பொய்க் பேசுகிறவர்களைக் குறித்து இன்னும் அனேக காரியங்கள் வேதத்தில் உண்டு. துணிகரமாய் பேதுருவிடம் பொய் சொன்ன அனனியா, சப்பீராளின் முடிவை அறிந்திருக்கிறோம். துணிகரமாய் பொய் சொல்லாதபடி நம் உதடுகளையும் ஆத்துமாவையும் காத்துக் கொள்ளுவோம். ஆமென்!

- Sis.பேபி காமராஜ்

 

ஜெபக்குறிப்பு:

தேவன் நமக்குத் தந்த தரிசனத்தை நிறைவேற்ற ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து 12 மிஷனெரிகள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)