இன்றைய தியானம்(Tamil) 27.06.2024
இன்றைய தியானம்(Tamil) 27.06.2024
இயன்றதைச் செய்திடுவோம்
"இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்" - மாற்கு 14:8
யொகான் பிலிப் பப்ரிசியஸ் (1711-1791) என்பவர் ஜெர்மானிய நாட்டு கிறிஸ்தவ மதப் போதகரும், தமிழறிஞரும் ஆவார். லூத்தரன் சபையைச் சேர்ந்தவர். 1740 -ல் தமிழ்நாட்டுக்கு வந்து இறைப்பணி ஆற்றினார். ஆங்கில - தமிழ் அகராதி தமிழில் வேதாகமம் ஆகியவற்றை எழுதினார். சென்னையில் இவருடைய சபையில் பல்வேறு நாட்டினர் இருந்ததால் அவர்களிடையே பிரசங்கம் செய்வதற்காக ஜெர்மன், டச்சு, போர்ச்சுக்கீசியம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளையும் கற்றறிந்து இந்த ஐந்து மொழிகளிலும் பிரசங்கம் செய்தார். தமிழ் மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்ப்பு செய்வதில் இவருடைய பங்கு மிகவும் மேலானது. இவருடைய மொழி பெயர்ப்பு குறித்து ஹீப்பர் (Hooper) என்பவர் குறிப்பிடும் போது "வேத மொழிபெயர்ப்பின் சரித்திரத்திலே பப்ரிஷியஸ் செய்து முடித்த வேலை அரும்பெரும் செயலெனப் பாராட்டப்பட வேண்டும்" என்றார். இவர் தன்னால் இயன்ற மட்டும் கிறிஸ்துவின் நாம மகிமைக்காக காரியங்களைச் செய்தார்.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பூமியில் வாழ்ந்த நாட்களில் பலவிதமான அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்தார். இந்நாட்களில் ஒரு ஸ்திரீ செய்த காரியம் அவரை வெகுவாய் அசைத்தது. அது என்னவென்றால் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் போஜன பந்தியிருக்கையில் ஒரு ஸ்திரீ விலையேறப் பெற்றப் நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டு வந்து அதை உடைத்து அந்த தைலத்தை அவர் சிரசின் மேல் ஊற்றினாள். சிலர் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன், அதிகமான கிரயத்துக்கு விற்று தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று முறுமுறுத்தார்கள். ஆனால் இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள் என இயேசுவால் பாராட்டைப் பெற்றாள்.
எனக்கன்பானவர்களே, ஊழியத்திற்கு எனக்கு அழைப்பு இல்லை என்று சொல்பவர்களா நீங்கள் கவலையே வேண்டாம். எங்கே என் நாமத்தினால் இரண்டு மூன்று பேர் கூடி ஒருமனப்பட்டு ஜெபித்தால் அவர்களுடைய ஜெபத்திற்கு பதில் தருவேன் என்று வாக்குப் பண்ணின இயேசு இன்றும் ஜீவனோடு இருக்கிறார். எனவே நாம் பணித்தளங்களுக்கு நேரிடையாக சென்று சுவிசேஷம் அறிவிக்க முடியாத சூழ்நிலையில் இருப்போம் என்றால் அப்படிப்பட்டதான ஊழியர்களுக்காக நாம் பாரத்தோடு ஜெபிப்போம். இயன்றதைக் கொடுப்போம். இதன்மூலமாக தேவனுடைய ராஜ்யம் பலமாக கட்டப்படும். நாமும் இயன்றதைச் செய்து பரமனின் ராஜ்ஜியத்தில் பங்கு பெறுவோம்.
"இயன்றதைச் செய்வோம்! இறைமகன் இயேசுவுக்காக!"
- V.P. பச்சையமுத்து
ஜெபக்குறிப்பு;
ஆமென் வில்லேஜ் டிவியில் வரும் நிகழ்ச்சிகள் மூலம் அநேக உள்ளங்கள் தொடப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864