இன்றைய தியானம்(Tamil) 28-10-2021
இன்றைய தியானம்(Tamil) 28-10-2021
மறைக்க முடியாதவைகள்
"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்;..." - நீதிமொழிகள் 28:13
ஒரு விவசாயி தர்ப்பூசணி செடியை பயிரிட்டிருந்தார். ஒருமுறை அவர் நகரத்திற்கு ஒரு வேலையாய் செல்ல வேண்டியதிருந்தது. ஆகவே தன் மகனிடம், "தர்ப்பூசணி தோட்டத்தைக் கவனித்துக் கொள், பழங்களைப் பறித்து தின்னாதே. அவை இன்னும் முற்றவில்லை" என்று கூறிச் சென்றார். மகன் தோட்டத்திற்கு சென்றான். முற்றியிருக்கும் ஒரு பழத்தைக் கண்டான். அதைப் பறித்து அங்குள்ள ஒரு பாறையின் மீது அதைப் போட்டு உடைத்து தின்றுவிட்டான். "என் தகப்பனார் சொன்னதற்கு மாறாக நான் செயல்படுகிறேன்" என்பதை அறிந்திருந்தாலும், "அவர் பார்த்துக் கொண்டா இருக்கிறார்" என மனதை சமாதானப்படுத்திக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டான்.
தகப்பனார் திரும்பி வந்து தோட்டத்தை பார்வையிட்டார். மகன் செய்த தவறை கண்டுபிடிக்கவில்லை, பல வாரங்கள் கழிந்தன. ஒருநாள் அவனது தந்தை பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது ஒரு பாறையைச் சுற்றி சிறு சிறு தர்ப்பூசணி செடிகள் வளர்ந்திருப்பதைக் கண்டார். மகன் தின்று போட்ட பழத்தின் விதையிலிருந்து அவைகள் முளைத்திருக்கின்றன என யூகித்துக் கொண்டார். நீண்ட நாட்களுக்குப் பின் அவன் செய்த காரியம் வெளிப்பட்டது. இதை யோசித்துக்கொண்டே நடந்த தகப்பனாருடன் தேவன் கீழ்க்கண்டவாறு இடைப்பட்டார்.
வாழ்க்கையில் சில நேரங்களில் மனிதன் செய்யும் தவறுகள் பிறருக்கு தெரியாமற் போகலாம். இப்படி செய்த தவறுகள் யாருக்கும் தெரியாது என்ற காரணத்தால் அதைக் குறித்து கவலையற்று இருப்போமானால் நம்மை நாமே ஏமாற்றுகிறோம். இந்த உலகத்தில் நாம் செய்யும் தவறுகள் ஒருநாள் மனுஷர் முன்பாக வெளிப்பட்டு நம்மை வெட்கப்படுத்தி விடும். அப்படி வெளிப்படாவிட்டாலும் மரணத்திற்குப் பின்பு தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நாம் நிற்கும்போது அவைகள் வெளிப்படும். நம்முடைய வாழ்க்கையின் நற்கிரியைகளோ, துர்க்கிரியைகளோ அவை அனைத்தும் தேவனுடைய ஞாபக புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
பிரியமானவர்களே! நம் குடும்பத்தில் ஒவ்வொரு நிகழ்வுகள் மூலமும் ஆண்டவர் நம்மோடு இடைப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார். நாம்தான் அவருடைய சத்தத்தை கேட்பதில்லை. காரியம் எதுவானாலும் இதில் எனக்கு ஏதாவது பாடம் உண்டா? நாம் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டுமா? நாம் மாறவேண்டிய காரியம் உண்டா? நாம் திருத்திக்கொள்ளக்கூடிய சுபாவம் என்ன? என்ற இருதயம் மாத்திரம் நமக்கு இருக்குமென்றால் ஆண்டவர் நம்முடன் பேசுவதை நாம் உணருவோம்.
- Mrs. ஜெபா கணேசன்
ஜெபக்குறிப்பு:
சுவிசேஷ ஊழியத்திற்குத் தேவையான பணத்தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250