Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 17.10.2024

இன்றைய தியானம்(Tamil) 17.10.2024

 

நம் தகுதி எப்படிப்பட்டது?

 

"ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" - யோவான் 8:51

 

குறுக்கு வழி உண்டா பரலோகத்திற்கு? என்று முதியவர் ஒருவர் ராபர்ட் என்பவரிடம் கேட்டுக் கொண்டே நடந்து சென்றார். காரணம் அந்த முதியவர் குறுக்கு வழியிலேயே சென்று பழக்கப்பட்டவர். பயணங்களின் போது டிக்கெட் எடுக்காமல், அலுவலகங்களில் அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதிப்பது, ரேஷன் கடையில் வரிசையில் நிற்பதில்லை . . . இப்படி நேர்வழியில் செல்லவே முயற்சிக்கவில்லை. ராபர்ட் அந்த முதியவரிடம், நீங்கள் எல்லாவற்றையும் குறுக்கு வழியில் சம்பாதித்ததால் பரலோகத்திற்கு செல்ல முடியாது என்றார். முதியவர், நான் செய்த பாவம் மன்னிக்கப்பட, வழி ஏதாகிலும் உண்டா? என்று கேட்டார். தான தர்மம் செய்துவிட்டால், காணிக்கை கொடுத்து விட்டால் போதுமா? என்று கேட்டார். ராபர்ட் அவரிடம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் கழுவப்படுவதே அதற்கான ஒரே வழி என்றார். யோவான் 14 : 6 ல் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்றார் இயேசு.

 

அது ஒன்றே நம் தகுதி. அநேக பக்தியான கிரியைகளை நாம் செய்திருக்கலாம். கிரியைகள் மட்டுமே நம்மை பரலோகம் கொண்டு செல்லாது. தேவன் நம்மேல் கிருபை வைத்து தம்முடைய தூயஇரத்தத்தினால் கழுவினால் போதும். கிருபையாய் நாம் பரலோகத்தை சுதந்தரித்துக் கொள்ள முடியும். ஒருவேளை நம் வாழ்வில் செய்த நற்கிரியைகளைக் குறித்தே மேன்மை பாராட்டிக் கொண்டிருப்போமானால் மனந்திரும்புவோம். கிருபைக்காக கெஞ்சுவோம்.

     

அன்பானவர்களே, நாம் நம்மைத் தாழ்த்தி, ஆண்டவரிடம் "ஆண்டவரே நான் ஒரு பாவி, பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு விரோதமாகவும் பாவம் செய்தேன். நீர் எனக்காக கல்வாரி சிலுவையிலே ஜீவனைக் கொடுத்தீரென்று விசுவாசிக்கிறேன். என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னியும்" என்று கேட்க வேண்டும். நிச்சயமாகவே இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். கிறிஸ்துவின் இரத்தமேயல்லாமல் நமக்கு வேறே ஒரு பரிகாரமும் இல்லை என்றார்.

    

தேவப்பிள்ளையே! நாம் வெள்ளியினாலும், பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டிருக்கிறோம். ஆம், நாம் இரட்சிக்கப்படுவதற்கோ, பரலோகம் செல்வதற்கோ குறுக்கு வழியே கிடையாது. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் கழுவப்படுவது ஒன்றே வழி! ஒவ்வொரு நாளும் நம் இருதயத்தை பரிசுத்தமாய் காக்க கற்றுக் கொள்வோம். பரலோக வாழ்வை பெற்று மகிழ்வோம்!!

- Mrs. கிரேஸ் ஜீவமணி

 

ஜெபக்குறிப்பு: 

25.000 கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்கும் திட்டத்தில் நம்மோடு தோள் கொடுக்கும் பலரை தேவன் எழுப்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)