Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 02.12.2023

இன்றைய தியானம்(Tamil) 02.12.2023

 

மிகுதி-குறைவு

 

"…அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்;" - மத்தேயு 9:37

 

கிராமம் ஒன்றிலே அருமையான ஒரு குடும்பம் கிறிஸ்துவுக்காக வாழ்ந்து வந்தது. அந்தக் குடும்பத்தில் மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு தாயாரும் இருந்தனர். அந்த தாயாருக்கு ஒரு ஆசை, தன் மூன்று பெண் பிள்ளைகளையும் கிறிஸ்து இயேசுவின் ஊழியத்திற்கு அனுப்ப வேண்டும் என்று! அதேப் போன்று நாகரீகமற்ற ஆதிவாசி இன மக்கள் வசிக்கும் இடத்திற்கு தன் முதல் மகளை அனுப்பினார். அவர் சென்ற சில மாதங்களில் விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவ வசதியில்லாத அந்த பகுதியிலே மரித்து விட்டார். பிறகு தனக்கு இருந்த இரண்டு மகள்களையும் அனுப்ப வேண்டும் என்று நினைத்து தன் உறவினர் மற்றும் நண்பர்களிடத்தல் சொன்னாள். அப்பொழுது அவர்கள் வேண்டாம் என்று சொல்லி இந்த தாயாரை திட்டினார்கள். ஆகிலும் அந்த தாயார் யார் சொல்லையும் கேட்காமல் தன் இரண்டு மகள்களையும் அனுப்பினார். பல வருடங்கள் நன்றாக ஊழியம் செய்தார்கள். அவர்களும் அதே வகைக் கிருமியினால் பாதிக்கப்பட்டு மரித்து விட்டார்கள். இந்த செய்தி அந்த தாயாருக்கு வந்தது. அப்பொழுது அந்த தாயார் மனம் உடைந்து அழுதார். எல்லாரும் சொன்னார்கள், எங்களுடைய சொல்லைக் கேளாமல் ஊழியத்திற்கு அனுப்பி மூன்று மகள்களையும் இழந்த பிறகு ஏன் அழுகிறாய். அழுது என்ன பிரயோஜனம் என்று கேட்டார்கள். அதற்கு அந்த தாய் சொன்னார்கள் நான் அழுவது இறந்த என் பிள்ளைகளுக்காக அல்ல, ஊழியத்திற்கு அனுப்புவதற்கு வேறு பிள்ளைகள் இல்லையே என்று தான் அழுகிறேன் என்றார்கள்.  

 

ஏழையான ஒரு விதவை தன்னிடமிருந்த இரண்டு காசை காணிக்கைப் பெட்டியில் போட்டாள். அப்பொழுது இயேசு, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று சொன்னார். அப்படி என்றால் ஏழை விதவை தனக்கென்று எதையும் சேமித்து வைக்காமல் எல்லாவற்றையும் தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் கொடுத்து விட்டாள்.

 

இதை வாசிக்கும் தேவனுடைய பிள்ளைகளே, ஏழை விதவைத்தாய் தன்னிடம் உள்ளதை எல்லாம் தேவனுக்காக கொடுத்தார். தேவனின் பார்வையில் அது விலையேறப்பெற்றதாய் இருந்தது. இன்று உலக வேலைக்காக படித்த பட்டதாரிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். ஆனால் தேவனின் ஊழியத்தைச் செய்ய ஒருவருமில்லை. அறுவடை மிகுதி, வேலையாட்களோ குறைவான இந்நாட்களில் வேலையாட்களாய் நீங்கள் வருவீர்களா? கண்ணீரோடு இயேசு உங்கள் அருகில் இருக்கிறார். நீங்கள் பேதையோ, பெலவீனரோ, பரவாயில்லை. "ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார்; இன்று நாம் யாராக இருந்தாலும் முடிவை பற்றி கவலைப்படாமல் தேவனின் ஊழியத்தை செய்வோம். உங்களிடம் இருப்பதை அவருக்காக விதைப்பீர்களா? இன்று நாம் விதைப்பதின் பலனை நம் கண்களால் காண முடியாவிட்டாலும் நிச்சயம் அதன் பலன் ஒருநாள் மிகுதியாயிருக்கும்!  

- Mrs. பூவிதா எபினேசர்

 

ஜெபக்குறிப்பு: 

பத்தாயிரம் கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்கும் திட்டத்தில் நம்மோடு

இணைந்துள்ள தன்னார்வ ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)