By Village Missionary Movement
Monday, 12-Apr-2021இன்றைய தியானம்(Tamil) 12-04-2021
சத்தத்துக்கு செவிகொடு
“இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில்,…” – சங்கீதம் 95:8
மகா அலெக்ஸாண்டர் உலகின் பல நாடுகளில் போரிட்டு அவைகளை தன் வசமாக்கிக் கொண்டவர். ஒருமுறை போர் முடிந்து ஓய்வுக்காக கூடாரத்தில் தங்கியிருந்த போது அவர் பயன்படுத்தும் குதிரை கூடாரத்தை விட்டு கடைத்தெருவுக்குள் நுழைந்து, கிடைப்பதை சாப்பிட்டு விட்டு, பின்னர் ஒரு கடையின் முன் படுத்துக்கொண்டது. அந்த கடைக்குள் யாரும் நுழைய முடியவில்லை. ராஜாவின் குதிரை என்பதால் விரட்டுவதற்கும் யாரும் முயற்சிக்கவில்லை. எனவே கடைக்காரர் ஒரு மணியை எடுத்து காதிற்கு அருகில் ஆட்டினார். எவ்வளவு சத்தம் எழுப்பினாலும் குதிரையை எழுப்ப முடியவில்லை. அதற்குள் குதிரையைத் தேடி போர்வீரர்கள் வந்து கடைக்காரர் மணி அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து சிரித்துக்கொண்டே, “ஐயா, இந்தக் குதிரை பயங்கர வாள் சத்தம், பல ஆயுதங்களின் சத்தம் கேட்டே பயப்படாதது உங்கள் சிறிய மணி சத்தத்திற்கா எழுந்துவிடும்” என்று சொல்லி குதிரையை எழுப்பி அழைத்துச் சென்றார்கள்.
இஸ்ரவேல் ஜனங்களும் அவர்களை ஆளும் ராஜாக்களும் பாவம் செய்யும்போது பல தீர்க்கதரிசிகளைக் கொண்டு தேவன் ஒவ்வொரு முறையும் கண்டித்து எச்சரித்துக்கொண்டேயிருந்தார், உணர்த்திக்கொண்டேயிருந்தார். ஆனால் அவர்கள் தங்கள் வாழ்வை மாற்றிக் கொள்வதற்கு முயற்சிக்கவில்லை. நாங்கள் வனாந்திரத்தில் தேவ சத்தத்திற்கே செவி சாய்க்கவில்லை தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுக்கா கீழ்ப்படிவது என்பது போல் வணங்கா கழுத்துள்ளவர்களாய் காணப்பட்டார்கள். இதினிமித்தம் அவர்கள் பலமுறை தேவகோபத்திற்குள்ளானார்கள்.
அன்பானவர்களே! நாமும் கூட முன்பெல்லாம் தேவ செய்திகளை ஆலயத்தில், கூட்டங்களில் மட்டுமே கேட்கமுடிந்தது. இன்று You tube, Facebook போன்ற சமூக வலைதளங்களிலும் தேவ செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன. அவைகளை கேட்டுக்கொண்டேயிருக்கிறோம். இது மிகவும் நல்லதே! ஆனால் இதில் ஒரு அபாயமும் உண்டு. வசனத்தை விதவிதமாய் கேட்டுக்கேட்டு எல்லா சத்தியமும் தெரிந்தது போன்ற உணர்வு வந்துவிடுகிறது. ஆனால் இருதயமோ உணர்வற்று மாறிவிடுகிறது. இதை வாசிக்கின்றதான நாமும் தேவ வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு இருதயத்தில் மாற்றமில்லாமல் அலெக்ஸாண்டரின் குதிரையைப் போலிருக்கிறோமா? சிந்திப்போம். நம் இருதயம் கடினப்பட்டு, உணர்வின்றி, கீழ்ப்படிதலின்றி இருக்குமானால் நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம். எவ்வளவு தேவ செய்திகளை கேட்கிறோம் என்பது முக்கியமில்லை, வார்த்தைகளுக்கு செவி கொடுக்கிறோமா என்பதே முக்கியம். நாமும் இன்றே தேவ சத்தத்துக்கு செவிகொடுப்போம் ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்.
- Mrs. அனிதா அழகர்சாமி
ஜெபக்குறிப்பு:
ஊழியர்கள் தங்குவதற்கான அறைகள் கட்டுவதற்கு தேவைப்படுகிற பணத்தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250