Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11.03.2024
Share:

By Village Missionary Movement

Monday, 11-Mar-2024

இன்றைய தியானம்(Tamil) 11.03.2024

 

முதிர்ச்சி

 

"…நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்" - 1 கொரிந்தியர் 13:11

 

நாம் ஆசையாக ஒரு மாங்கன்றை வாங்கி, நம்முடைய வீட்டில் அதனை நட்டி, அதனை கருத்தாய் பராமரிப்போம். ஒவ்வொரு நாளும் அதற்குத் தேவையான தண்ணீர், உரம் என எல்லாவற்றையும் ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் செய்து நல்ல வளர்ச்சியை எதிர்பார்ப்போம். அதே மரக்கன்று வளர்ந்து மாமரமாக மாறி கனி கொடுக்க ஆரம்பித்துவிட்டால் எவ்வளவாய் சந்தோஷப்படுவோம். ஒவ்வொரு நாளின் வளர்ச்சியும் மிகவும் முக்கியம். அதுபோல கிறிஸ்துவுக்குள் பிறந்தவர்களாகிய நாம் ஒவ்வொரு நாளும் வளர வேண்டும் என கர்த்தர் எதிர்பார்க்கிறார். எதில் என்றால் ஆவிக்குரிய வாழ்வில், வேத வாசிப்பில், நற்கிரியைகளைச் செய்வதில், தேவனோடுள்ள உறவில், ஆழமான ஜெப ஜீவியத்தில் என சொல்லிக் கொண்டே போகலாம். இப்படியாக வளர்ந்த ஆவிக்குரிய மனிதனின் முதிர்ச்சியின் அடையாளம் என்ன என சிந்திப்போம்.

 

1) பிறருக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உடையவர்களாயிருப்பார்கள். யோனத்தான் சவுல் ராஜாவின் சொந்த மகனாய் இருந்தாலும், தான் சிநேகித்த தாவீதிடம் நீர் இராஜாவாயிருப்பீர். அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாய் இருப்பேன் என விட்டுக் கொடுக்கிற யோனத்தானைப் பார்க்கிறோம்.

 

2) இப்போது தாங்கள் வகிக்கும் பொறுப்பை, பதவியை, முதன்மை இடத்தை மேன்மையாக எண்ணாமல் அவற்றை விட்டுக் கொடுத்து தாழ்ந்த நிலையில் ஊழியம் செய்ய முன் வருவார்கள். மற்றவர்கள் எல்லோரையும் தன்னை விட மேலானவர்களாக எண்ணுவார்கள். படிக்காதவர்கள், ஏழைகள், இரட்சிக்கபடாதவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களைத் தங்களை விட மேன்மையாக எண்ணி முழு கனத்தையும் கொடுத்து அவர்களோடு நட்பு கொள்வார்கள்.

 

3) எல்லோருக்கும் பணிபுரியும் சிந்தை: ஆண்டவராகிய இயேசு தம்முடைய சீஷர்களின் கால்களை கழுவினார். இப்படிப்பட்ட சிந்தை உடையவர்கள் தங்களைக் குறித்த எந்த பெருமையான எண்ணமும் அவர்களுக்கு இராததால் எந்த வித தடையுமின்றி பிறரை கனம் பண்ண முந்திக் கொள்வார்கள்.

 

இதை வாசிக்கின்ற அருமையானவர்களே, "குறைகுடம் கூத்தாடும், நிறைகுடம் தளும்பாது" என்ற முதுமொழிக்கேற்ப ஆவிக்குரிய வாழ்வில் வளராதவர்கள் குறைகுடம் போல் சிறுசிறு காரியங்களிலும் மனத்தாங்கல் அடைவார்கள். ஓசையிடுகிற கைத்தாளம் போல அங்கலாய்ப்பின் சத்தத்தை எப்போதும் அவர்களிடம் கேட்க முடியும். ஆவிக்குரிய முதிர்ச்சி உடையவர்களோ தேவ அன்பினால் நிரப்பப்பட்டவர்களாக எப்போதும் நிதானமாய் இருப்பார்கள். உங்கள் நிலை என்னவாக உள்ளது?

- Bro. ஜெயக்குமார்

 

ஜெபக்குறிப்பு 

ஆமென் வில்லேஜ் டிவி சேட்டிலைட் சேனலாக மாற்றப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al