Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 19.12.2023
Share:

By Village Missionary Movement

Tuesday, 19-Dec-2023

இன்றைய தியானம்(Tamil) 19.12.2023

 

கொண்டாட்டம்  

 

"பண்டிகை நாட்கள் முடிந்து,… பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்;" - லூக்கா 2:43

 

பண்டிகை என்றாலே எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம் தான். அதுவும் கிறிஸ்துமஸ் என்றால் கேக், புதுடிரஸ், ஸ்டார், கிறிஸ்துமஸ் மரம் இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். மற்றொரு பக்கம் வண்ண வண்ண விளக்குகளால் தங்களுடைய வீட்டை அலங்கரிப்பது, உறவினர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை அனுப்புவது இன்னும் ஏராளமான பல காரியங்கள் உண்டு! இது ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கம் கிறிஸ்துமஸ் பவனி, கிறிஸ்துமஸ் பாடல்கள், கிறிஸ்துமஸ் தாத்தா என வெளிப்படையான காரியங்கள் இயேசுவின் பிறப்பை வெளிக்காட்டும்.

 

இதேபோல இயேசுவானவர் வாழ்ந்த நாட்களிலும் கூட வருடந்தோறும் எருசலேமில் பஸ்கா பண்டிகை நடைபெறும். இந்த பண்டிகைக்கு இயேசுவும், அவருடைய தாய் தகப்பன் உறவினர் எல்லோரும் கடந்து சென்றனர். பண்டிகை நாட்கள் முடிந்து திரும்பி வருகிற போது பிள்ளையாகிய இயேசு எருசலேமில் இருந்துவிட்டார். இதனை அவருடைய தாய், தகப்பனார் அறியாதிருந்தார்கள். அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து பிரயாணம் செய்து உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரை தேடினார்கள். காணாததினாலே அவரைத் தேடிக் கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். காரணம், பண்டிகை குதூகலிப்பில் இயேசுவை மறந்து விட்டார்கள்.

 

பிரியமானவர்களே, இயேசுவின் தாய் தகப்பன் அவரை மறந்து விட்டனர். நாமும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்து பிறப்பின் நோக்கத்தை மறந்து விட வாய்ப்புண்டு. பாரம்பரியப் பழக்கமாக, வழக்கமாக பல காரியங்களில் முழுகிவிட்டு என் உள்ளத்தில் பிறந்த இயேசு, பிறர் உள்ளத்தில் பிறக்க நான் செய்ய வேண்டியது என்ன என்பதை மறந்து அருகிலுள்ள வீடுகளில் வசிப்போருக்கு கேக் மற்றும் பலகாரங்கள் கொடுத்துவிட்டு, இயேசுவை கொடுக்காமல் மறந்து சென்றுவிட வாய்ப்புகள் உண்டு. மேலும் நமக்கு அருகிலுள்ள ஏழை, எளிய மக்கள் மற்றும் அனாதைகள், திக்கற்றோர் எனப் பலதரப்பட்டவர்களை மறந்து விடாமல் அவர்களுக்கும் உதவி செய்வோம். இந்த பண்டிகை காலத்தில் சுவிசேஷ பணியின் முக்கியத்துவத்தை மறந்து விடாமல் தீவிரமாய் அறிவிப்போம்.

- Mrs. கிரேஸ் ஜீவமணி

 

ஜெபக்குறிப்பு:

கண்மணியே கேள் ஜெபத்திட்டத்தில் இணைந்துள்ள வாலிப பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al