By Village Missionary Movement
Wednesday, 02-Aug-2023இன்றைய தியானம்(Tamil) 02.08.2023
சட்டீஸ்கர்
"என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;" - சங்கீதம் 2:8
சட்டீஸ்கர் மாநிலம் நவம்பர் 1, 2000ல் மத்தியபிரதேசம் மாநிலத்திலிருந்து பிரிந்து அரசு அங்கீகாரத்துடன் தனிமாநிலமாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அதற்கு முந்தைய நாட்களில் இருந்தே சட்டீஸ்கர் ஒரு பகுதியாக இருந்தது. எப்படியெனில் சத்தீஸ்கட் (சத்தீஸ் - 36, கட் - மலை, அரண் போன்ற பகுதி) 36 மலை போன்ற பகுதியை உள்ளடக்கிய மாநிலமாக இருந்தது. இந்த ஜனங்கள் பேசும் மொழி சட்டீஸ்கரி.
1868 ம் ஆண்டு ஜெர்மனி தேசத்திலிருந்து ஒரு மிஷனெரி சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள சத்னாமி என்ற இன மக்களை குறித்து கேள்விப்பட்டார். இந்த இன மக்கள் மரித்த தங்கள் மூதாதையர்களை தெய்வமாக வணங்கி மூடபழக்கவழக்கங்களுக்கு மிகவும் அடிமைப்பட்டு இருந்தனர். அவர் ஜெபித்து தன் உள்ளத்திலே தீர்மானம் எடுத்து சட்டீஸ்கர் மாநிலத்தில் சத்னாமி இன மக்களை தேடி வந்தார். அவரது பெயர் Rev.Oscar T. Lohr இவர் ஒரு மருத்துவ மிஷனெரி. இவர் ராய்பூர் அருகிலுள்ள பிஸ்ராம்பூர் என்ற இடத்தில் வந்து அங்குள்ள ஜனங்கள் மத்தியில் சுவிசேஷப் பணியை முதன்முறையாக செய்ய தொடங்கினார். அங்கு வாழ்ந்து வந்த ஆதிவாசி இன மக்களுக்கு தன்னால் முடிந்த மருத்துவப் பணியையும் செய்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை எடுத்துச் சொன்னார். சாதாரண மக்கள் முதல் ராணுவத்துறையில் பணிபுரிந்த அதிகாரிகள் வரைக்கும் எல்லோரிடமும் சகஜமாக பேசி நட்புறவு கொண்டார். அநேக ஜனங்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டு ஞானஸ்நானம் பெற்றனர். இவர் பிஸ்ராபூர் என்ற இடத்தில் முதல் சபையை கட்டினார். இதுவே சட்டீஸ்கரில் முதலாவது கட்டப்பட்ட தேவாலயம். இதை தொடர்ந்து அநேகர் இன்றும் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். இன்றும் அநேக ஊழியர்கள், மிஷனெரிகள் எழும்பி கர்த்தருக்கென்று ஊழியம் செய்து வருகின்றனர். இன்றும் சட்டீஸ்கர் மாநிலம் 73% ஆதிவாசி ஜனங்களைக் கொண்ட பின்தங்கிய மாநிலமாகவே உள்ளது. அங்கு மருத்துவ, கல்வி,போக்குவரத்து வசதி மிகவும் குறைவு. இன்னும் உராவ் போன்ற இன் மக்களுக்கு அவர்களுடைய தாய்மொழியில் வேதம் இல்லை.
இதை வாசிக்கின்ற நண்பர்களே! ஆதிகால மிஷனெரிகளைப் போல நீங்களும் இந்திய தேசத்தின் எழுப்புதலின் பங்கடைய விரும்புகிறீர்களா? எங்களோடு இணைந்து உங்களால் முடிந்த ஊழியங்களை செய்ய அன்புடன் அழைக்கிறோம். சட்டீஸ்கரிலிருந்து வந்து நமது VMM ராக்லாண்ட் வேதாகம கல்லூரியில் பயிற்சி பெற்று மீண்டும் தங்கள் சொந்த மாநிலத்தில் சுதேச மிஷனெரிகளாக நமது ஊழியர்கள் ஊழியம் செய்து வருகிறார்கள். அப். 16:9 ல் மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் பவுலை வேண்டிக்கொண்ட சம்பவத்தை வாசிக்கிறோம். அதைப்போல இன்றும் சட்டீஸ்கர் மாநிலத்தில் ஒரு பெரிய தேவை இருக்கிறது. அந்த தேவையை நிறைவு செய்ய நீங்கள் முன்வருவீர்களா?
- Bro. சங்கர் ராஜ்
ஜெபக்குறிப்பு:
நமது ஊழியர்களின் பிரயாணங்களில் தேவ பாதுகாப்பு காணப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864