By Village Missionary Movement
Wednesday, 09-Nov-2022இன்றைய தியானம்(Tamil) 10-11-2022
கண்ணாடி
‘’…ஒருவன் திருவசனத்தைக் கேட்டும், அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்.’’ - யாக்கோபு1:23
ஒரு முறை ஒரு பெரிய கம்பெனியின் வாசலில் அங்கு வேலை செய்ய வருபவர்கள் காணும்படியாக ஒரு அறிவிப்பு தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் உங்கள் வளர்ச்சியைத் தடை செய்து கொண்டிருந்த மனிதன் இன்று இறந்துவிட்டான். அவனுக்குக் கீழே இருக்கும் அறையில் இறுதிக் கடன்கள் செலுத்தப்படும். அதில் அனைவரும் வந்து சேர்ந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறீர்கள் என்று அழைப்பு விடப்பட்டிருந்தது. அதை பார்த்த அனைவருக்கும், தங்களோடு வேலை பார்த்த ஒருவர் மரித்தது துயரமாக இருந்தாலும் யார் தங்களுடைய வளர்ச்சியை தடை செய்தது யார் என்றும் அவரைக் காண வேண்டும் என்றும் ஆச்சரியமும் வியப்பும் உடையவர்களாக காத்திருந்தனர். கடைசியாக அந்த அறை திறக்கப்பட்டபோது, ஒவ்வொருவராக அந்த சவப்பெட்டியை காண விரைந்தனர். சென்று பார்த்தபோது திடுக்கிட்டனர். ஒரு நிமிடம் அவர்களால் ஒன்றுமே பேசமுடியவில்லை. அந்தப் பெட்டியில் முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் பார்த்தபோது அவர்களுடைய உருவமே அந்தப் பெட்டியில் தெரிந்தது. அதன் அருகில் ‘’உங்கள் வளர்ச்சியைத் தடுக்க யாராலும் முடியாது உங்களைத் தவிர’’ என்று எழுதப்பட்டிருந்தது.
எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதை கேள்விப்பட்டு பாபிலோனின் ராஜா வெகுமானத்தை அனுப்பினான். எசேக்கியா அவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டு, தன் ராஜ்யத்தில் எங்கும் அவர்களுக்கு காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை. இந்நிலையில் எசேக்கியா தன்னுடைய வளர்ச்சிக்கும், ஆசீர்வாதத்திற்கும் காரணமாகிய ஆண்டவரை மறந்து, பின்வரும் தன்னுடைய சந்ததியின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக மாறிவிடுகிறான். எசேக்கியாவின் சந்ததியில் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது.
இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! நம்முடைய குணம் என்பது ஒரு கண்ணாடி. தங்களுடைய உண்மையான உருவத்தை ஒவ்வொருவரும் அதில் பார்த்துக் கொள்ளலாம். ஆண்டவரால் படைக்கப்பட்ட மனிதர்கள் ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும் எப்படி இருக்க வேண்டும்? என வேதமாகிய கண்ணாடி நமக்குப் போதிக்கிறது. நம்முடைய முக ஒப்பனைக்கும், நம்மை சரி செய்து கொள்வதற்கும் மாத்திரமே பயன்படுத்தப்படும் சாதாரண கண்ணாடியை விட வேதமாகிய கண்ணாடி மிகவும் பயனுள்ளது. எனவே இந்தக் கண்ணாடியை அனுதினமும் பயன்படுத்தி, நம்மிடம் இருக்கும் வளர்ச்சிக்கு எவை தடையாக இருக்குகிறது என்பதைக் கண்டுபிடித்து சரி செய்துகொள்வோம்! நம்முடைய வளர்ச்சிக்கு தேவன் நமக்கு துணை செய்வார்!
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
வாலிபப் பெண்பிள்ளைகளுக்கென பிரத்தியேகமாக வெளியிடப்படும் ‘’கண்மணியே கேள்’’ பத்திரிக்கையின் மூலம் அநேகர் பயன்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250