By Village Missionary Movement
Sunday, 18-Sep-2022இன்றைய தியானம்(Tamil) 19-09-2022 (Youth Special)
நீ பரிசுத்தமானவள்!
“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” - நீதி. 28:13
தன்னைத் தானே குற்றப்படுத்திப் கொள்வது Soft condemnation-னு சொல்லுவாங்க. இது ரொம்ப ஆபத்தானது. இதனால நீங்களும் சந்தோஷமா இருக்க மாட்டீங்க, உங்களைச் சுற்றி இருக்கிற யாரும் Happy-யா இருக்கமாட்டாங்க. இயேசப்பா உங்களுக்கு கொடுத்திருக்கிற விடுதலையை உணரவிடாதபடி, அனுபவிக்க முடியாதபடி சத்துரு use பண்ணுற தந்திரமான ஆயுதம்தான் இந்த Soft condemnation.
ஏசாயா 43:25 -ல, “உன் பாவங்களை நினையாதிருப்பேன்“ –னு இயேசப்பா சொல்றாங்க. நீ எவ்ளோ பெரிய பாவம் பண்ணி இருந்தாலும் இயேசப்பாகிட்ட உண்மையா மன்னிப்புக் கேட்டு மனம் திரும்பினா, அவர் உன்னை மன்னிக்க ரெடியா இருக்காரு. நீ பண்ண பாவத்துனால குற்ற உணர்ச்சியோட “என்னால வெளிய வரமுடியாது. நான் வாழ்றதே Waste” ன்னு நினைச்சு துவண்டு போயிட்டா இயேசப்பா உன்னோட வாழ்க்கைல Best- ஆக வச்சுருக்கிறதை Miss பண்ணி விடுவாய்.
வேதத்துல சிம்சோனை பற்றி நாம வாசிக்கிறோம். அவர் பாவம் செய்து தேவனுடைய அபிஷேகத்தை இழந்தபோது கூட அவர் திரும்பவும் ஆண்டவர் கிட்ட தன்னை ஒப்புக்கொடுத்து, பாவங்களை மன்னிக்கும்படியா கேட்டு Surrender ஆகுறார். அப்போ அவர் இழந்த அபிஷேகத்த திரும்பவும் பெற்று, அவர் உயிரோடிருந்தப்போ கொன்ற பெலிஸ்தியர்களை விட அவர் சாகும் போது கொன்ற பெலிஸ்தியர்கள்தான் அதிகம்-னு வேதம் சொல்லுது.
நமக்கு Eagle நல்லாத் தெரியும். புயல் வரும்போது மற்ற பறவைகள் –லாம் பயந்து பறந்து போய்டுமாம். ஆனா கழுகு இந்தப் புயலை பயன்படுத்திக் கொண்டு இன்னும் மேலே மேலே, பறக்க try பண்ணுமாம். அந்த கழுகு தன்னை தானே weak, waste–னு நினைக்காம, என்னால பறக்க முடியும் –னு நம்பிக்கையோட, அந்த புயலை ஒரு opportunity –யாக use பண்ணி இன்னும் உயர பறக்க try பண்றது போல, உங்க வாழ்க்கைலயும் எந்த பாவமோ எந்த சூழ்நிலையோ உங்களை waste –ஆ நினைக்க வச்சாலும் கர்த்தரிடத்துல அவரோட சமூகத்துக்கு நீங்க போய் மன்னிப்பு கேட்டு மனம் திரும்பும் போது இயேசப்பா அந்தக் காரியத்தை Easy –யா மேற்கொள்ள கிருபை கொடுப்பாங்க. அந்த Negativity –யை Positive காரியமா கர்த்தர் மாற்ற வல்லவராய் இருக்கிறார்.
“நீங்க waste , ஒன்றுக்கும் உதவாதவள் – உதவாதவன்“ என்று சத்துரு சொல்லுற பொய்யை நம்பாதீங்க. நீங்க ராஜாதி ராஜாவோட செல்லப்பிள்ளைகள். உங்களை கர்த்தர் Best -ஆ உயர்த்தி எல்லோருக்கும் ஆசீர்வாதமான பாத்திரமாக பயன்படுத்துவார். என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு என்று அறிக்கையிட்டு உங்களை நீங்களே குற்றப்படுத்துகிற காரியத்திலிருந்து வெளியே வந்து கர்த்தருக்குள் குற்றமில்லாத வாழ்க்கை வாழ்ந்து செழித்திருக்க ஜெபிக்கிறேன்.
- Mrs. திவ்யா பெர்னார்ட்
ஜெபக்குறிப்பு:
கெத்செமனே வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டிடப்பணிகளின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250