Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14-08-2022
Share:

By Village Missionary Movement

Sunday, 14-Aug-2022

இன்றைய தியானம்(Tamil) 14-08-2022

 

ஜெனியின் நம்பிக்கை

 

“...நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.” - மத்தேயு 21: 22 

 

Leave நாளாக இருந்ததால் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள் ஜெனி. நீங்க எல்லாரும் Leave நாட்கள் பகல் நேரத்தில் தூங்குவீர்களா? இல்லையா? ஓ... தூக்கமே வராதா? சரி... சரி... தூங்கிக்கொண்டிருந்த ஜெனியை அப்பா எழுப்பினாங்க. “இன்றைக்கு நம் ஊரில் நற்செய்திக் கூட்டம் 2-வது நாள், கிளம்புமா போகலாம்” என்றதும் வேகமாகக் கிளம்பினாள். அது கோடை காலமானதால் வெயில் அதிகமாக இருந்தது. அந்த கிராமத்தையே வறட்சி ஆட்டிப் படைத்தது. நேற்றைய தின கூட்டத்தில் “மழைக்காக சிறப்பு உபவாச ஜெபம் ஏறெடுக்கப்படும்” என்று பிரசங்கியார் சொன்னது ஜெனிக்கு ஞாபகம் வரவே குடையை எடுத்து வைத்துக்கொண்டாள்.

 

ஜெனியும் சாப்பிடாமல் உபவாசத்தோடு சென்றாள். அவளின் விசுவாசத்தைக் கண்ட பெற்றோர் சந்தோஷப்பட்டார்கள். குடும்பமாய் நற்செய்திக் கூட்டத்திற்கு கிளம்பினார்கள். ஜெனியின் கையில் குடையைக் கண்ட அப்பா “சாயங்காலக் கூட்டத்திற்கு எதுக்குமா குடை?” என்றார். “அப்பா மழைக்காக ஜெபிக்கப் போகிறோமே, இயேசப்பா நமக்கு நல்ல மழையைக் கொடுப்பார். அப்பொழுது வீடு வந்து சேர குடை தேவைப்படுமே!” என்று களங்கமற்ற தொனியில் ஜெனி பதில் சொன்னதைக் கண்ட பெற்றோர் வாயடைத்துப் போனார்கள். அடடா! இவள் ஏமாந்து போகாமல் இருக்க வேண்டுமே என்று அப்பா நினைத்துக் கொண்டார். 

 

கூட்டம் தொடங்கியது. மழைக்காக ஜெபித்துவிட்டு பிரசங்கியார் பிரசங்கம் பண்ண ஆரம்பித்தார். பிரசங்கத்தின் நடுவே சில இடிகள் இடிக்கத் தொடங்கி மின்னல்களும் மின்ன ஆரம்பித்தது. ஜெனி அப்பாவின் முகத்தைப் பார்த்தாள் “இயேசப்பா ஜெபத்திற்குப் பதில் தந்து விட்டாரே” என்று சொல்வதைப்போல் இருந்தது. அப்பா மக்களைச் சுற்றிலும் பார்த்தார். கருமேகம் சூழ்ந்திருந்தது. பிரசங்கத்தின் முடிவில் “ஆமென்” என்று முடிக்கும்போது, மழைத்துளிகள் விழ ஆரம்பித்தது. தங்கள் பைபிளும் – பாட்டுப்புத்தகமும் நனையாமல் இருக்க இடம் தேடி, நாலா திசைகளுக்கும் ஓடினர். ஜெனி தான் கொண்டு வந்திருந்த பாலித்தீன் பைக்குள் பைபிளையும் – பாட்டுபுத்தகங்களையும் பத்திரமாக வைத்துக் கொண்டு குடையை விரித்தாள். ஜெனியின் நம்பிக்கையைப் பார்த்த பெற்றோரும் குடை கொண்டுவந்திருந்தனர். குடும்பமாய் கர்த்தரை துதித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

 

என்ன குட்டீஸ்! ஜெனி கர்த்தர் மீது வைத்திருந்த நம்பிக்கை வீண்போகவில்லை பாத்தீங்களா? நீங்களும் ஜெபிக்கும்போது, இயேசப்பா அற்புதம் செய்வார் என்று நம்பிக்கையோடு கேட்டால் நிச்சயம் கிடைக்கும். நம்பிக்கையோடு கேட்டுப் பாருங்கள். நம்ப முடியாத அற்புதத்தைப் பார்ப்பீங்க!!! God Bless You.

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al