Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08-06-2022
Share:

By Village Missionary Movement

Wednesday, 08-Jun-2022

இன்றைய தியானம்(Tamil) 08-06-2022

 

கர்த்தர் மேல் நம்பிக்கை

 

‘’…கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்’’ -சங்கீதம் 40:4

 

ஜேம்ஸ் என்ற சிறுவனுக்கு பிறக்கும்போதே கை, கால்கள் சரியானபடி வளர்ச்சி இல்லை. கால்களில் சில விரல்கள் மட்டுமே நீட்டிக்கொண்டிருக்கும். அதைக் கொண்டே தன் வேலைகளை செய்து வந்தான். பள்ளியில் சேர்ந்தபோது பலர் அவனை அனுதாபத்தோடும் சிலர் கேலியோடும் பார்த்தனர். ஜேம்ஸ் தன் நிலைகுறித்து கவலைப்பட்டு பள்ளி செல்வதில்லை என முடிவெடுத்தான். அவன் பெற்றோர் அவனை வீட்டிலிருந்தபடியே படிக்க ஏற்பாடு செய்தனர். பள்ளி பாடங்களோடு, பைபிளையும் கற்றுத் தந்தனர். அவனும் வேதத்தை நன்கு வாசித்தான். கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்க ஆரம்பித்ததால் தன்னை பற்றிய கவலையை மறந்துவிட்டான். என் மூலமாகவும் தேவன் மகிமைப்பட முடியும் என விசுவாசத்தோடு கர்த்தரை பற்றிக் கொண்டான். என்ன ஆச்சரியம், இன்று பைபிள் காலேஜில் விரிவுரையாளராக உள்ளார்.

 

வேதத்தில் யோபுவின் புத்தகம் சோதனை நேரத்தில் நம்மை பெலப்படுத்துகிற புத்தகம். ஒரே நாளில் எல்லாவற்றையும் இழந்த போதிலும் கர்த்தரை தூஷியாமல் கர்த்தர் மேலுள்ள தன் நம்பிக்கையை விடாதவராய் கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்றார். தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் நீர் செய்ய நினைத்தது தடைபடாது ( யோபு 42:2) என்றார். அவ்வளவாய் கர்த்தரை பற்றிக் கொண்டார். 

 

இதனை வாசிக்கும் தேவ பிள்ளைகளே ! உங்களின் நம்பிக்கை எங்குள்ளது? யார் மீது உள்ளது? சரீர பெலத்தின் மீதா, பணத்தின் மீதா, பொருள் மீதா, மனிதர்கள் மீதா எல்லாம் ஒருநாள் மாறிவிடும். தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவராகிய தாவீது செல்கிறார், ”மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.”(சங்கீதம்118:8) என்று. பொருள் மீது நம்பிக்கை இருக்குமானால், பொருள் இல்லாத போது சோர்ந்து போய்விடுவோம். கர்த்தர் மாறாதவர், சர்வ வல்லவர் அவர் மீது நம்பிக்கை இருக்குமானால், எல்லா நேரங்களிலும் யோபுவைப் போல் சோர்ந்து போகாமல் ஓடமுடியும். கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் என எரேமியா17:7ல் காண்கிறபடி பாக்கியவானாயிருப்போம்.

- M.ஹெப்சி மனுவேல் ஜெயராஜ்

 

ஜெபக்குறிப்பு:

வாலிபர் மாலை நிகழ்ச்சியின் மூலம் வழிநடத்தப்பட்டு வருகிற வாலிபர்களுக்காக, இன்னும் புதிதாக ஜெபக் குழுக்கள் கிராமங்கள் தோறும் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al