By Village Missionary Movement
Sunday, 14-Sep-2025இன்றைய தியானம்(Tamil) 14.09.2025 (Kids Special)
ஜிம்மியும் ஜோனுவும்
"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்" - வெளி.3:20
ஒரு அழகான கிராமத்தில் ஜோன் தனது அப்பா அம்மாவுடன் சந்தோஷமாய் வாழ்ந்து வந்தான். ஜோனுக்கு pet animals னா ரொம்ப பிடிக்கும். அதனால ஒரு அழகான நாய்க்குட்டியை வாங்கி அதற்கு 'ஜிம்மி' ன்னு பெயர் வச்சு வளர்த்தான். அந்த நாய்க்குட்டி வெள்ளை நிறமாய், கருமையான கண்களோடு புசு புசுன்னு ரொம்ப அழகா இருக்கும். ஜோன் அந்த குட்டியை ரொம்ப அன்பாக வளர்த்து வந்தான். தினமும் அதனோடு விளையாடுவான். பின்பு குட்டி கொஞ்சம் பெரிதானதும் அந்த குட்டியின் கழுத்தில் ஒரு செயினை மாட்டி, அதை வெளியே கொண்டு வந்து விளையாட விடுவான்.
நாட்கள் கடந்தன. ஒரு நாள் கண்களில் கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்த ஜோனிடம், அவன் அம்மா, 'ஏன் ஜோன் என்ன ஆச்சு? ஏன் இப்படி அழுகிறாய்?' என்றார்கள். அம்மா, என்னோட ஜிம்மியை காணோம் என்றான். நீ எப்பவும் கையில் தானே பிடித்திருப்பாய் ஏன் அதை ஓடவிட்டாய்? என்றார்கள். நான் அதைப் பிடித்துக் கொண்டு வெளியில் வந்த போது, ஜிம்மி மற்றொரு நாய்க்குட்டியை கண்டதும், அதனுடன் விளையாட ஆரம்பித்தது. நானும் அதை கட்டியிருந்த சங்கிலியை அவிழ்த்து விட்டேன். என் கண்முன்னே விளையாடிக்கொண்டிருந்த ஜிம்மி கொஞ்ச நேரத்திற்குள் காணாமல் போய்விட்டது.
நானும் விளையாடிவிட்டு வந்துவிடும் என்று நினைத்தேன். வெகுநேரமாகவே ஜிம்மி.... ஜிம்மி என்று சத்தம் போட்டு அழைத்தேன். ஆனால் ஜிம்மி வரவே இல்லை என்று அழுதான். உடனே அம்மா சரி வா அழாதே, உனக்கு வேறே நாய்க்குட்டி வாங்கித் தருகிறேன் என்று சொல்லி அழைத்துச் சென்றார்கள். ஆனாலும் ஜோன் "என் ஜிம்மி எங்கு போய் கஷ்டப்படுதோன்னு தெரியவில்லை. நான் அதை ஆசை ஆசையாய் வளர்த்தேனே" என்று அடிக்கடி நினைப்பான். தினமும் ஜோன் தான் ஜிம்மியை தொலைத்த இடத்தில் போய் தேடுவான். ஒருநாள் ரோட்டு ஓரத்தில் மெலிந்த உடலுடன் ஜிம்மி படுத்துக்கிடப்பதை பார்த்த ஜோன், ஓடிப்போய் அதை தூக்கி, சந்தோஷமாய் வீட்டிற்கு கொண்டு வந்தான். முன்பைவிட அதை இன்னும் அதிகமாக பராமரிக்க தொடங்கினான். அன்றிலிருந்து ஜிம்மி அவனை விட்டு பிரிந்ததே இல்லை.
குட்டி பிள்ளைகளே! நீங்களும் ஜிம்மியைப் போல இயேசப்பா வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், தப்பு பண்ணி அவரை விட்டு தூரமாபோயிருக்கிறீர்களா, இப்பொழுதே உங்களுக்காக ஏக்கத்தோடு காத்து நிற்கும் இயேசப்பாகிட்ட ஓடி வந்துருங்க. இயேசப்பா உங்களை மீண்டும் அரவணைத்து அவர் பிள்ளையாக மாற்ற ஆயத்தமாயிருக்கிறார். O.K வா.
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864