By Village Missionary Movement
Sunday, 23-May-2021இன்றைய தியானம்(Tamil) 23-05-2021 (Kids Special)
வழிகாட்டும் சிலுவை
“…நான் போகும் வழியை அவர் அறிவார்;…” – யோபு 23:10
வர்ஷினி காலையில் எழுந்ததும் ரொம்ப ஜாலியாக சந்தோஷமாக கிளம்பினாள். அங்குமிங்கும் ஓடினாள். எந்த டிரஸ் போடணும்னு செலக்ட் பண்ணினாள். அம்மா நான் எவ்வளவு சீக்கிரமாகவே கிளம்பிட்டேன் பார்த்தீங்களா? நீங்க இன்னும் கிளம்பவில்லையா? ஐயோ சீக்கிரமா கிளம்புங்கன்னு அவசரப்படுத்தினாள் வர்ஷினி. Tour க்கு போறோம்னு சொன்னதும் அவ்வளவு சந்தோஷம் வர்ஷினிக்கு, அதுவும் Zoo க்கு போறது இரண்டு மடங்கு சந்தோஷமாய் இருந்தது. உங்களுக்கும் சந்தோஷமா இருக்குதா. என்னென்ன விலங்குகளெல்லாம் இருக்கும் சொல்லுங்க குட்டீஸ். Tiger, Lion, Elephant, deer இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நீங்க Tour போயிருக்கீங்களா. ஓ… School இல் இருந்து கூட்டிட்டு போனாங்களா. சிங்கத்தை நேரா பார்க்கும்போது ரொம்ப பயமா இருக்குமில்லையா?
அதுபோலத்தான் வர்ஷினி எல்லா இடத்தையும் சுற்றிப் பார்த்தாள். ஒவ்வொரு மிருகத்தையும் பார்க்கும்போது ஆச்சரியமாய் இருந்தது. அப்பா சொன்னாங்க எங்க கையை பிடித்துக் கொள்ளணும் ரொம்ப கூட்டமா இருக்குது. Animals இருக்கிற கம்பியை தொடக்கூடாது என்று அறிவுரை சொன்னாங்க. சரிப்பா என்று கேட்டுக்கொண்டாள். Animals-ஐ பார்க்க, பார்க்க அந்த இடத்தை விட்டு வரவே வர்ஷினிக்கு மனசு இல்லை. அப்பா கையை விடுங்க, நான் உங்க பின்னாடியே வந்துடுவேன் என்று சொல்லி கையை இழுத்துக் கொண்டாள். அப்பாவும், அம்மாவும் வர்ஷினியை திரும்பி பார்த்துக் கொண்டே வந்தார்கள். கொஞ்ச தூரம் சென்றதும் வர்ஷினியை பார்த்தால் காணாமல் போய்விட்டாள். அப்பாவும், அம்மாவும் பதறிப்போனார்கள். வர்ஷினி, வர்ஷினி என்று சத்தம் போட்டு கூப்பிட்டார்கள். வர்ஷினி வழிமாறி வேறு இடத்திற்கு சென்றுவிட்டாள். அப்பா அம்மா என்று அழுது கொண்டே போனாள். வழியில் போகின்ற நபரிடம் எங்க அம்மாவை பார்த்தீர்களா? என் அப்பாவை பார்த்தீர்களா? என்று கேட்டாள், ஒருவருக்கும் தெரியவில்லை. அழுதுகொண்டே போனாள். சுற்றிலும் பார்த்தாள் அவள் கண்ணுக்கு சிலுவை தெரிந்தது. அந்த சிலுவையை நோக்கிப் பார்த்தே நடந்தாள். ஆலயம் வந்தது ஆலயத்தைப் பார்த்ததும் இருதயத்தில் இருந்த பயமெல்லாம் பறந்தே போனது. அங்கு Pastor இருந்தாங்க வர்ஷினியை அன்போடு விசாரித்தார். முகவரியை கேட்டு தெரிந்துகொண்டார். நானே உன்னை உன் பெற்றோரிடம் அழைத்து செல்வேன் என்று வர்ஷினியை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்தார். வர்ஷினியை கண்ட பெற்றோர் இயேசப்பாவுக்கு நன்றி சொன்னார்கள். சரியான நேரத்தில் ஆண்டவர் உங்களை சந்திக்க வைத்திருக்கிறார் என்று Pastor க்கும், இயேசப்பாவுக்கும் Thanks பண்ணினாங்க.
அன்பு தங்கங்களே! உங்க குடும்பத்திலும் வாழ்வதற்கு வழி தெரியாமல், பணகஷ்டம், வியாதி, வறுமை என்று கலங்கிக்கொண்டு இருக்கலாம். சிலுவையை நோக்கி பாருங்க. நீங்க நல்லா இருக்கணுங்கறதுக்காகத்தான் சிலுவையில் இரத்தம் சிந்தி இயேசப்பா மரித்தாங்க. அவர் உங்களை சரியான வழியில் நடத்தி, உங்கள் தேவைகளை சந்திப்பதற்கு வல்லவராய் இருக்கிறார். ஆமென்.
- Sis. தெபோராள்
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250