Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 07.06.2024

இன்றைய தியானம்(Tamil) 07.06.2024

 

கடைசி தருணம்

 

"சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைபாராட்ட எனக்குஇடமில்லை, அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது;…" - 1 கொரி. 9:16

 

உங்கள் அனைவருக்கும் டைட்டானிக் கதை நன்றாகவே தெரிந்திருக்கும். மனிதன் தனக்கு மீறின சக்தி ஒன்று உண்டு என்று உறுதியாய் நம்பின வருடம் 1912. எப்படியாவது பிழைத்துவிட மாட்டோமா என்று அனைவரும் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது மரணத்தை பார்த்து பயப்படாத ஓர் மனிதனின் உண்மை கதையைக் காண்போம்.

 

இக்கொடூர சம்பவம் நடந்து நான்கு வருடங்களுக்கு பிறது டைட்டானிக் கப்பல் விபத்திலிருந்து தப்பித்தவர்கள், அதன் நினைவு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அங்கு வந்த ஓர் இளைஞன் சொன்ன காரியம் அனைவரின் இருதயத்தையும் அசைத்தது. இந்த இளைஞன் உடைந்து போன கப்பலின் நடுவே மாட்டிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்பொழுது இவருடன் கப்பலில் வந்த ஜான் ஹார்ப்பர் என்பவர் இவரை உயிர் காக்கும் ஒரு சிறு படகில் ஏற்றினார். அதற்கு முன் அவர் கேட்ட ஓர் கேள்வி நீர் இரட்சிக்கப்பட்டு விட்டீரா? அவ்விளைஞன் இல்லை என்றான். "இதை விட அதிக மீட்பை கொண்ட ஒன்றை பற்றி உனக்கு தெரிய வேண்டியுள்ளது" என்று கூறின ஜான் அவருடன் சுவிசேஷத்தை பகிர்ந்து கொண்டார். பிறகு மீண்டும் ஜான் மற்றவர்களை காப்பாற்ற சென்று விட்டார். அச்சிறு படகில் சுமார் ஆறு பேரை காப்பாற்றினார். கடும் குளிரினால் தன் பெலனை இழந்து தண்ணீரில் மூழ்கி கொண்டிருந்த போதும் சுவிசேஷத்தை அறிவிப்பதில் இவர் தளரவில்லை. இயேசுவைப் பற்றி சொல்லிக் கொண்டே உயிர் பிரிந்தார். இதனை இந்த இளைஞன் கண்ணீருடன் கூறின போது அந்த அரங்கமே கலங்கிப் போனது.

 

அப். பவுல், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட உடனே தாமதமின்றி, ஆலயங்களில் பிரசங்கித்தார். மேலும் சுவிசேஷம் அறிவிப்பதை மேன்மையாகவும், பெரிதான சிலாக்கியமாகவும் கருதினார். எனவேதான் பவுல் சுவிசேஷம் அறிவிப்பது என்மேல் விழுந்த கடமை. சுவிசேஷத்தை நான் பிரசங்கியிருந்தால் எனக்கு ஐயோ என எழுதுகிறார்.

 

பிரியமானவர்களே, சுவிசேஷம் அறிவிப்பது என்பது எல்லார் மேலும் விழுந்த கடமை. ஆண்டவரை பின்பற்றுகிற ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பிரதான வேலை. எந்த நேரத்திலும் நாம் சொல்லும் சுவிசேஷம் அவர்களுடைய வாழ்வை ஊன்ற கட்டக் கூடியது. நமக்கு ஆண்டவரால் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு நாளையும் கடைசி தருணமாக எண்ணி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இயேசுவை அறிவிப்போம். வாழ்வின் விளிம்பில் உள்ளவர்களுக்கும், மரணத்தை நோக்கி செல்லும் ஒவ்வொருவருக்கும் நம்முடைய சுவிசேஷம் புதிய ஆரம்பமாக அமையும்.

- Mrs. சக்தி சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு:

CCC (Child Care Child) திட்டத்தில் இணைந்துள்ள சிறுவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)