Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  10-03-2021

இன்றைய தியானம்(Tamil)  10-03-2021

கர்த்தர் தரும் ஆசீர்வாதம்

“கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.” – நீதி. 10:22

ஒரு அரசன் தன் அரண்மனையிலுள்ள ஒரு சேவகன் எப்போதும் சந்தோஷமாயிருந்ததை பார்த்து மந்திரியிடம், “இவன் எப்போதும் எப்படி சந்தோஷமாயிருக்கிறான்” எனக் கேட்டார். மந்திரி சிறிது நேரம் யோசித்து, ராஜாவிடம் 99 பொற்காசுகள் கேட்டு வாங்கி ஒரு பையில் போட்டு, அந்தப் பையில் “ராஜாவின் அன்பளிப்பு -100 பொற்காசுகள்” என எழுதி அந்த சேவகனிடம் கொடுத்தார். அந்த சேவகன் எண்ணிப் பார்த்து 99 மட்டும் இருந்ததால் தன் மனைவி, பிள்ளைகளை அழைத்து தவறு நடந்து விட்டது எனக் கூறி வீடு முழுவதும் தேடிப்பார்த்து எரிச்சலும், கோபமும் அடைந்தான். மறுநாளிலே மிகவும் விரக்தியோடு இருந்த அவனைப் பார்த்து விட்டு, மந்திரியின் மூலம் நடந்ததைக் கேள்விப்பட்ட ராஜா தனதல்லாத ஒரு பொற்காசுக்காக சந்தோஷத்தையே இழந்துவிட்டானே என எண்ணினான். 

வேதத்தில் சீரிய நாட்டு படைத்தலைவனாகிய நாகமான் தன் குஷ்டரோகம் நீங்க தேவ மனுஷனாகிய எலிசாவைத் தேடி வந்தான். எலிசாவின் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ண அவனின் குஷ்டம் நீங்கியது. அதற்கான காணிக்கையை எலிசாவிடம் கொடுக்க, அவன் அதை வாங்க மறுத்துவிட்டான். ஆனால் எலிசாவின் வேலைக்காரனாகிய கேயாசி அதன்மேல் ஆசைப்பட்டு நாகமானை பின்தொடர்ந்து போய், எலிசா கேட்டார் என்று சொல்லி பொருட்களை வாங்கினதால் நாகமானின் குஷ்டம் அவனையும் அவன் சந்ததியையும் பிடித்தது. 

அதே போல நம் வாழ்விலும் கர்த்தர் அநேக ஆசீர்வாதங்களை கொடுத்திருக்க, இல்லாத ஒன்றைக் குறித்து கவலைப்பட்டு, அதைத் தேடி வாழ்க்கையை நஷ்டப்படுத்துவாருமுண்டு. கர்த்தர் கொடுத்த வேலை, குடும்பம், அந்தஸ்து, தாலந்துகள் இவைகளில் திருப்தியாய் நாம் காணப்படுகிறோமா? அல்லது கர்த்தர் என்ன கொடுத்தார் என்று முறுமுறுக்கிறோமா? பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது என்று அறியாமல் கேயாசியைப் போல சாபத்தை பெற்றுக் கொள்வாருண்டு. கர்த்தர் நமக்கு கொடுத்த விலையேறப்பெற்ற இரட்சிப்பை நினைவில் கொண்டு, இம்மைக்காக கவலைப்பட்டு மனம் போனபடி வாழ்க்கையை நடத்தாமல் கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதத்திற்காக அவரை துதித்து அவரின் கிருபையை நாம் பெற்றுக்கொள்வோம். 
-    Mrs. வசந்தி ராஜாமோகன் 

ஜெபக்குறிப்பு:
7000 ஊழியர்களைத் தாங்கும் 7000 குடும்பத்தினர் எழும்ப ஜெபியுங்கள்.  

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)