Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  28-02-2021 (Kids Special)

இன்றைய தியானம்(Tamil)  28-02-2021 (Kids Special)

உண்மையே உயர்வை தரும் 

“...கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்,…” – மத்தேயு 25:21 

அன்பு செல்லங்களே! Fruits என்றால் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? என்னென்ன Colours-ல இருக்கும் சொல்லுங்க பார்ப்போம்.  Red கலர்ல Apple இருக்கும், Yellow கலர்ல மாம்பழம், Orange கலர்ல ஆரஞ்சு பழம், green கலர்ல grapes இப்படி நிறைய பழங்கள் எல்லாவற்றையும் சாப்பிட்டு இருக்கிறாயா? Super ரா இருக்கும்தானே! பழங்களை பார்த்தா யாருக்குத் தான் ஆசை வராது. அதுவும் தோட்டத்தில் பழத்தை பறித்து சாப்பிட்டால் தனி சுவையாகத் தான் இருக்கும். 

ஒரு நாள் மாதவனும், அவனுடைய நண்பர்களும் Foot ball மைதானத்திற்கு போய் விளையாடிவிட்டு நடந்து வந்தார்கள். அவர்கள் வரும் வழியில் தான் ஒரு அழகான மாந்தோப்பு இருந்தது. கொத்து கொத்தாய் தொங்கும் பழத்தைப் பார்த்துக்கொள்ளத் தோட்டக்காரன் எப்போதும் காவலுக்கு இருப்பார். என்றைக்காவது ஒரு நாள் இந்த மாம்பழத்தை பறித்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தான் மாதவன். இவனுடைய அம்மாவிற்கு உடம்பு சரியில்லாததால் வேலைக்கு செல்ல முடியாமலும், சமைக்காமலும் இருந்தார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் பசியோடு நடந்து போனான். அந்த மாம்பழ தோட்டம் வந்ததும் பசி இன்னும் அதிகமானது. அன்று தோட்டத்தில் யாருமில்லாததைக் கண்டு உள்ளே போய் மாம்பழம் பறித்து சாப்பிட்டு, அம்மாவிற்கும் எடுத்துக் கொண்டான். அப்பொழுது பார்த்து தோட்டக்காரர் வந்து விட்டார். டே திருட்டு பயலே என்று அடித்து விட்டார். மாதவன் அழுதுகொண்டே, ஐயா பசியினால் பறித்து சாப்பிட்டேன் என்று அம்மாவின் நிலையையும் எடுத்து சொன்னான். சரி உன்னை நம்புகிறேன். இந்த இரண்டு கிலோ மாம்பழத்தை விற்று வா என்று Test பண்ணினார். மாதவனும் கடைத்தெருவிற்கு சென்று சரியான விலைக்கு விற்று பணத்தை கொண்டு வந்து கொடுத்தான். அடுத்த நாள் வரச்சொல்லி 10 கிலோ மாம்பழத்தை விற்று வரச் சொன்னார். அதிலும் உண்மையாய் இருந்தான். அடுத்த நாள் ஒரு மூட்டை பழத்தை விற்று வரச் சொன்னார். அதையும் விற்று உண்மையாய் கொடுத்தான். இதை கண்ட தோட்டக்காரர் எனக்கு பிள்ளையே இல்லை உன்னை மகனை போன்று பார்த்துக் கொள்கிறேன். உனக்கு தேவையான எல்லாவற்றையும் நானே செய்கிறேன் என்று சொன்னதும், மாதவனால் நம்ப முடியவில்லை. உடம்பு சரியில்லாத அம்மா இறந்து விட்டதால், மனவேதனையில் இருந்த மாதவன் இந்த மகிழ்ச்சியான வார்த்தையை கேட்டவுடன் ஆண்டவருக்கு நன்றி செலுத்தினான். மாதவன் உண்மையாய் இருந்ததால், அநேக நன்மைகளை பெற்றுக் கொண்டு ஆசீர்வாதமாய் வாழ்ந்தான். 

குட்டீஸ் நீங்களும், உங்க பேச்சு, நடக்கையை யாருமே பார்க்கவில்லையென்றாலும், இயேசப்பா என்னை பார்த்துக் கொண்டே இருக்கிறார் என்று நினைத்து உண்மையாய் இருந்தால் உயர்வும், ஆசீர்வாதமும் உங்களைத் தேடி வரும். ஆமென்! 
-    Y. அனீஸ் ராஜா

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)