Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  12-01-2021

இன்றைய தியானம்(Tamil)  12-01-2021

பாடுகளில் பரமானந்தம்  

“சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்பட வேண்டும்.” – மாற்கு 13:10 

சாது சுந்தர்சிங் அநேக கிராமங்களுக்கு சென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தை குறித்து அறிவித்ததின் நிமித்தமாக அநேக மக்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள். தேவன் சுந்தர்சிங்கை வல்லமையாக பயன்படுத்தினார். சுவிசேஷத்தினிமித்தம் துன்பப்படுத்தப்படும்போது, அவர் மகிழ்ச்சியோடும், பொறுமையோடும் இருப்பதைக் கண்ட அநேகர் அவருடைய நற்செய்தியை ஏற்றுக்கொள்ள முன் வந்தனர். ஒரு சமயம் ஒரு கிராமத்துக்குச் சென்று அங்கிருந்த மரத்தடியில் உட்கார்ந்து பாடல்கள் பாட ஆரம்பித்தார். சீக்கிரத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஆனால் அவர் இயேசுகிறிஸ்துவைப் பற்றி அங்கு பேசுவதைக் கேட்ட உடனே அந்தக் கூட்டம் அவர்மேல் கோபம் கொண்டது. அதில் ஒருவன் மிகவும் மூர்க்கம் கொண்டு, சாதுவைப் பலமாகத் தாக்கினபடியினால் அவர் சரீரமெல்லாம் காயம், முகத்திலிருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது. இத்தனை அவமானங்களையும் அவர் சகித்துக் கொண்டு எழுந்து மிகவும் சாந்தமாக அந்த மக்களின் மன்னிப்புக்காக ஜெபம் செய்து விட்டு, மறுபடியும் ஆண்டவரின் அன்பைப் பற்றிக் கூற ஆரம்பித்தார். இதைக் கண்ட அநேகர் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்க ஆரம்பித்தார்கள். 

நாம் வேதத்தில் பார்க்கும் பொழுது அப்போஸ்தலர் 5ம் அதிகாரத்தில் அப்போஸ்தலர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி ஜனங்களுக்கு அறிவித்ததின் மூலமாக திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகி கர்த்தரிடமாக சேர்க்கப்பட்டார்கள் என்று வாசிக்கிறோம். அப்பொழுது பிரதான ஆசாரியர்கள் அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக் குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டார்கள். அவர்கள் அவமானப்படுத்தப்பட்ட போதும் அதை அவர்கள் சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டு ஆலோசனை சங்கத்தை விட்டுப் புறப்பட்டுப்போய், தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம் பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள். இதன் நிமித்தம் அநேகர் இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள்.

பிரியமானவர்களே! நம்மை துன்பப்படுத்துகிற நபர்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்று பிரயாசப்படுகிறோமா? அவர்களுக்காக ஜெபிக்கிறோமா? எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார் என்று 1 தீமோத்தேயு 2:4ல் எழுதப்பட்டிருக்கிறதே! சாது சுந்தர்சிங்கைப் போல, அப்போஸ்தலர்களைப் போல வாழ்க்கையில் வரும் பாடுகளை சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டு, மற்றவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொல்லுவோம். ஆண்டவருடைய ஊழியத்தை இன்னும் உற்சாகமாய் செய்வோம். நிச்சயம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்! 
-    P. ஸ்டீவ் மேத்யூ

ஜெபக்குறிப்பு:
“ஜெபக்கூடாரம்” கட்டுமானப் பணிக்கான பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)