இன்றைய தியானம்(Tamil) 11.05.2025
இன்றைய தியானம்(Tamil) 11.05.2025
மேலே கரடி கீழே சிங்கம்
"தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்" - சங்கீதம் 37:27
Hello குட்டி பிள்ளைகளே! உங்களுக்கு Animals எல்லாம் பிடிக்குமா? காட்டிலுள்ள Animals பெயர் எல்லாம் சொல்லுங்க பார்ப்போம். சிங்கம், புலி, கரடி, யானை, மான் டி.ம சூப்பரா சொல்லிட்டீங்க. இப்படி Animals எல்லாம் வேட்டையாடுகிற இரண்டு அண்ணன்களை பற்றி தான் இன்னைக்கு நாம் கதை கேட்க போறோம்.
ரவி, ராஜா இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் வேட்டையாடுவதிலும் மிகச்சிறந்தவர்கள். ஒரு நாள் இருவரும் வேட்டையாட காட்டிற்குள் சென்றனர். விலங்குகளை வேட்டையாடுகிற ஆர்வத்திலே இரண்டு பேரும் தனித்தனியே பிரிந்து விட்டனர். ரவி காட்டுக்குள்ளே தூரமாக சென்று விலங்குகளை தேட ஆரம்பித்தான். அந்த நேரத்தில் தீடீரென்று சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான். சிங்கம் அவனை நோக்கி வந்தது. ரவி, பயத்திலே பிடித்தான் பாரு ஓட்டம். திரும்பி பார்க்காம ஓடி ஒரு மரத்துமேலே ஏறிவிட்டான். சிங்கமும் அவனை பின் தொடர்ந்து அந்த மரத்தின் அடியில் போய் நின்றது. ரவி பெருமூச்சு விட்டவனாய் மேலே பார்த்தான். அங்கு பார்த்தால் ஒரு உறுதியான கிளையில் கரடி படுத்துகிடந்தது. கீழே சிங்கம் மேலே கரடி இதை பார்த்த ரவியின் இருதயமும் கை, கால்களும் நடுங்கியது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான்.
அந்நேரம் சிங்கம் கரடியை பார்த்து சொன்னது நமக்கெல்லாம் எதிரி இந்த மனிதர்கள் தான். எனவே அவனை கீழே தள்ளிவிடு நாம் இருவரும் பகிர்ந்து சாப்பிடுவோம் என்றது. கரடி சொன்னது இல்லை இல்லை தெரிந்தோ தெரியாமலோ என்னிடத்தில் வந்து விட்டான். அவனுக்கு தீங்கு செய்யமாட்டேன் என்றது. சிங்கம் கோபத்துடன் மரத்துக்கடியிலேயே நின்றுகொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் கரடி தூங்கி விட்டது. இப்பொழுது சிங்கம் ரவியை பார்த்து," ஏய் மனிதா, எனக்கு இப்போ மாமிசம் தேவை. எனவே தூங்கிக்கொண்டிருக்கும் அந்த கரடியை கீழே தள்ளிவிடு, நான் சாப்பிட்டு விட்டு போய்விடுவேன், நீயும் பயமில்லாமல் உன் வீட்டிற்கு போகலாம்" என்றது. இது ரவிக்கு நல்ல யோசனையாக இருந்தது. எனவே கரடியை தள்ளிவிடும்படி, கரடி பக்கத்தில் போனான். அதற்குள் கரடி விழித்து விட்டது. உடனே, சிங்கம் பார்த்தாயா இந்த மனுஷங்களோடே புத்தியை அவன் காட்டி விட்டான். இன்னும் ஏன் யோசிக்கிறாய்? தாமதிக்காமல் உடனே தள்ளிவிடு என்றது. உடனே கரடி இல்லை அவன் எனக்கு தீமை செய்தாலும் பரவாயில்லை, நான் நம்பிக்கை துரோகம் பண்ணமாட்டேன் என்றது. சிங்கமும் போய்விட்டது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ரவி தனது தவறை உணர்ந்து கரடியிடம் மன்னிப்புக் கேட்டு வீடு திரும்பினான்.
தம்பி தங்கச்சி! நாம் எப்பவுமே மற்றவர்களுக்கு தீமை செய்யக் கூடாது. அது இயேசப்பாவுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதுவும் நமக்கு நன்மை செய்தவர்களுக்கு தீமை செய்ய நினைக்கவே கூடாது. O.k வா.
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864