இன்றைய தியானம்(Tamil) 17-03.2023
இன்றைய தியானம்(Tamil) 17-03.2023
பின்பற்று
‘’…அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்” - மத்தேயு 19:29
ஒரு வகுப்பில் ஒரு மாணவன் எப்போதும் பெருமையோடு தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்றும், ஆசிரியர்களையும் குறைசொல்லிக் கொண்டேயிருப்பான். ஒருநாள் அவனைப் பார்த்து ஆசிரியர் கரும்பலகையில் 1000 என எழுதி வாசி என்றார். அவனோ எழுந்து ஓராயிரம் என்றான். தொடர்ந்து ஒரு பூஜ்ஜியத்தினை சேர்த்து இதை வாசி என்றார். அவன் பத்தாயிரம் என்றான். மறுபடியும் ஒரு பூஜ்ஜியத்தினை ஒன்றிற்கு முன் சேர்த்து இப்போது வாசி என்றார்கள். அவன் பத்தாயிரம் தான் என்றான். உடனே ஆசிரியர், “மதிப்பு குறைந்த எண் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு பின் தொடர்ந்து வரும்போது அதன் மதிப்பு கூடும். அதே எண் முன்னாடி செல்ல முயற்சிக்கும் போது அதன் மதிப்பு குறையும். இதுபோலத்தான் ஆசிரியர் மாணவர் உறவும்’’ என்றார்.
இதுபோல மண்ணான நாமும் கூட சர்வ வல்லவரை பின் தொடர்ந்து செல்லும் போது நம் மதிப்பு கூடும். பேதுரு உம்மைப் பின்பற்றினோமே எனக்கு என்ன கிடைக்கும் எனக் கேட்ட போது நீங்களும் என்னைப் போல் சிங்காசனத்தின் மேல் அமர்ந்து நியாயந்தீர்ப்பீர்கள் என்றதோடு நூறத்தனையாய் பலனைப் பெறுவீர்கள் என்கிறார். மேலும் அவரைப் பின்பற்றும்போது நித்தியஜீவனையும் சுதந்தரிக்க முடியும் என்றார். ஆனால் லூசிபர் கிறிஸ்துவுக்கு முன் செல்ல நினைத்தான். பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டான். இன்றும் நாம் அவரை பின்பற்றும்போது நித்திய வாழ்வை சுதந்தரிப்பதோடு நூறத்தனையான பலனையும் பெறுவோம். உலகின் ஒளியாம் அவரைப் பின்பற்றும்போது சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று சந்திரன் வெளிச்சம் கொடுப்பது போல் நாமும் மனுஷர் முன்பாக வெளிச்சம் கொடுக்கிறவர்களாயிருப்போம். நம் வெளிச்சத்தினிடத்திற்கு ஜாதிகளும், நம் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள். அதற்கு நாம் செய்வது ஒன்றே ஒன்றுதான். கிறிஸ்துவை நம் முதன்மையாய் வைத்து பின் செல்லவேண்டும். எனக்கு எல்லாம் தெரியும் என் திறமை என கிறிஸ்துவை பின் வைத்து நாம் முன்னோக்கி செல்லக் கூடாது.
பிரியமானவர்களே, உங்கள் வாழ்வு எப்படி உள்ளது? வெளிச்சமாக, மதிப்பிடத்தக்கதாய் உள்ளதா? காரணம், கிறிஸ்து உங்களைத் தம்மண்டை வைத்திருப்பதினால்! உங்கள் வலது பாரிசத்தில் தேவன் இருப்பதினால் மறவாதீர்கள்! இருளடைந்ததாய் மதிப்பற்றதாய் உங்கள் வாழ்வு உள்ளதோ? இன்றே இரட்சகராம் இயேசுவை முன் வைத்து பின் செல்லுங்கள், உங்கள் வாழ்வு வெளிச்சம் பெறும். நூறத்தனையான பலனோடு நித்திய ஜீவனையும் பெறுவீர்கள்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
மாணவர்கள் மத்தியில் நடைபெறும் ‘’ஸ்கூல் மிஷன்’’ ஊழியத்தின் மூலம் அநேக சிறுபிள்ளைகள் ஆண்டவரின் அன்பை ருசிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864