Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 12-01.2023

இன்றைய தியானம்(Tamil) 12-01.2023

 

ஜெபக் கூட்டம்

 

‘’அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.”-அப். 12:12

 

ஒரு தேவஊழியர் தென்கொரிய தேசத்தில் உள்ள பெரிய திருச்சபையில் பிரசங்கம் பண்ண அழைக்கப்பட்டார். அது மிகுந்த குளிர்காலம். அதிகாலை 5 மணி ஆராதனைக்கு அழைத்துச் செல்ல வாகனம் வந்தது. அந்த குளிரில் மலையில் உள்ள திருச்சபைக்கு புறப்பட்டார். இந்தக் குளிரில் யார் ஆராதனைக்கு வருவார்கள் என்ற கேள்வியோடு சென்றார். ஆனால் அங்கு அவர் கண்ட காட்சி 1000க்கும் மேற்பட்ட ஜனங்கள் கூடி ஜெபித்துக் கொண்டிருந்தனர். பிரமிப்போடு அங்குள்ள போதகரிடம் கேட்டதற்கு, நாங்கள் தினந்தோறும் அதிகாலை 4-5 தேசத்திற்காக ஜெபிப்போம் மற்றும் சபையில்100- க்கும் மேற்பட்ட வீட்டு ஜெபக்குழுக்கள் உள்ளன என்று கூறினார். ஆம், தென்கொரிய தேசத்தின் மிகப்பெரிய எழுப்புதலுக்கு இந்த ஜெபக்குழுக்களே காரணம்.

 

வேதத்திலும் கூட பேதுரு சிறையிலடைக்கப்பட்டு, சிரச்சேதம் பண்ண உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திருச்சபையார் அவருக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார்கள். பேதுரு அற்புதமாக விடுவிக்கப்பட்டு வீட்டுக்கு வந்த போது அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார்கள் என்று வாசிக்கிறோம். ஆம், ஜெபம் பண்ணினார்கள் என்பது அல்ல ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு தெளிவாக ஆவியானவர் எழுதி வைத்துள்ளார் என்பதை பாருங்கள். இவர்கள் ஜெபம் பண்ணிக் கொண்டிருந்ததினிமித்தம் பேதுரு விடுவிக்கப்பட்டார். 

 

இதை வாசிக்கும் அன்பானவர்களே, இன்றும் அநேகர் செல்போன், போதை, இச்சை போன்றவற்றால் சிறையிருப்பால் கட்டப்பட்டு உள்ளனர். இவர்களுக்காக நாம் செய்ய வேண்டியது, அவர்களை கூப்பிட்டு அட்வைஸ் பண்ணுவதோ, கண்டிப்பதோ அல்ல, அவர்களுக்காக ஜெபிப்பதே! 2000 பேர் 3000 பேர் கூடி ஜெபித்தால்தான் தேவன் கேட்பார் என்றல்ல 2 பேர் 3 பேர் கூடினால் (மத்.18:20) தேவன் அவர்கள் நடுவே இருப்பேன் என்று வாக்குப் பண்ணியுள்ளார். நாங்கள் சந்திக்கும் வீடுகளில் வீட்டு ஜெபக்கூட்டங்கள் நடத்தி வருகிறோம். ஜெபக்கூட்டம் நடக்கும் வீடுகளில் உள்ள பிள்ளைகளுக்காக ஜெபித்த வேளையில் சில தேவையில்லாத காரியங்களிலிருந்தும் வேதனையான சூழ்நிலைகளிலிருந்தும் பிள்ளைகள் விடுவிக்கப்பட்டனர். தேசத்தில் பெரிய எழுப்புதல் உண்டாக, முதலாவது நமக்குள் எழுப்புதல் உண்டாக வேண்டும் பின்பு நம் குடும்பத்தில், நம்முடைய திருச்சபையில் இப்படி பற்றிப் பிடிக்கும் ஜெப அக்கினி பெரிய எழுப்புதலைக் கொண்டு வரும். வீட்டு ஜெபக்கூட்டம் நடத்த தயவாய் பிரயாசப்படுங்களேன். 

 

நினைவிற்கு: வீடுகள்தோறும் ஜெபக்கூட்டம் நடத்தினால், தேசத்தின் எழுப்புதலுக்கு விதைத்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

- Mrs. தவமணி வைரவேல்

 

ஜெபக்குறிப்பு:

7000 மிஷனெரிகள் ஒரு லட்சம் கிராமங்கள் என்கிற இலக்கை அடைய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)