இன்றைய தியானம்(Tamil) 04-10-2022
இன்றைய தியானம்(Tamil) 04-10-2022
யாருடன் நமக்குப் போராட்டம்?
“ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும்,... நமக்குப் போராட்டம் உண்டு.” - எபே.6:12
நாம் சமீப காலங்களில் செய்திகளிலும் சமூக ஊடகங்களிலும் பார்க்கும், கேட்கும் வார்த்தைகள்:- கலவரம், வன்முறை, போராட்டம், அநீதி என்பவைகளே. சமுதாயத்தில் அநீதி நடக்கும்போது, அதைத் தட்டிக் கேட்க என்று ஒரு கூட்ட மக்கள் எழும்பிப் போராடுகிறார்கள். கிறிஸ்துவை அறிந்த அவருடைய பிள்ளைகளான நமக்கும் ஆவிக்குரிய போராட்டங்கள் உண்டு. ஆனால் நாம் போர்க்களத்தில் சந்திக்க வேண்டியது, நம் சக மனிதர்களையா? இல்லை, நமக்கு விரோதமாகப் போராடிக் கொண்டிருக்கும் வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும், இப்பிரபஞ்சந்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், நம்முடைய போராட்டம் இருக்கிறது. இந்த ஆவிகளுக்கு விரோதமான போராட்டங்களை நாம் எப்படி எதிர்கொள்ளமுடியும்? என்று கேட்கலாம். கர்த்தர் நமக்கு ஒரு வழியை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். இதை எபேசியர் 6:11 –ல் காணலாம். பிசாசின் தந்திரங்களை எதிர்த்து நிற்க திராணி வேண்டுமானால் நாம் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ள வேண்டும்.
சர்வாயுதவர்க்கம் (armor of god) எவையென்றால் “சத்தியம்” என்னும் கச்சை, “நீதி” என்னும் மார்க்கவசம், சமாதானத்தின் சுவிசேஷத்துக்குரிய “ஆயத்தம்” என்னும் பாதரட்சை, “விசுவாசம்” என்னும் கேடகம், “இரட்சணியம்” என்னும் தலைச்சீரா, “தேவவசனம்” என்னும் ஆவியின் பட்டயம் ஆகிய இவைகளே. இந்த ஆயுதங்களை அணிந்துகொண்டு நாம் ஆவிக்குரிய போராட்டங்களை நடத்தி ஜெயம் பெறுமாறு ஆண்டவர் எதிர்பார்க்கிறார். அதற்காகவே நம்மை அழைத்திருக்கிறார். பலவகையான ஆவிகளுடன் நமக்குப் போராட்டம் உண்டு. இயேசு கிறிஸ்து, வேத வசனத்தினால் சாத்தானை ஜெயித்தது போல், நாமும் வேத வசனங்களாகிய ஆவியின் பட்டயத்தைக் கையில் எடுத்து, சாத்தானை ஓட ஓட விரட்ட வேண்டும்.
போத்திபாரின் மனைவியைப் பிடித்த விபசாரத்தின் ஆவி, யோசேப்பையும் பிடிக்க நினைத்துப் போராடினபோது, “தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி” என்று கூறி, அந்த ஆவிக்குரிய போராட்டத்தில் வெற்றி பெற்று ஓடவில்லையா? பொருளாசையின் ஆவியின் தூண்டுதலினால், அனனியா, சப்பீராள் இருவரும் பொய் கூறி, ஆவியின் போராட்டத்தில் தோல்வியடைந்து மடிந்து போனார்களே. இவைகளெல்லாம் நமக்கு எச்சரிப்பின் செய்தியாக கொடுக்கப்படிருக்கிறது.
நம்முடைய போராட்டம் எப்பேர்ப்பட்ட ஆவிகளுடன் இருக்கிறது? ஆராய்ந்து, போருக்கு ஆயத்தமாவோம். போராட்டத்தில் வெற்றி பெற்று, பரலோக பாக்கியத்தைக் கண்டடைவோம்.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
காலைதோறும் 5: 00 மணிக்கு you tube-ல் நாம் ஒளிபரப்பும் உடன்படிக்கை ஆராதனை மூலம் அநேகர் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250